நாம்தான் ஜெயிப்போம், நம்பிக்கையுடன் இருங்கள்: மும்பை அணிக்கு நீடா அம்பானியின் நெகிழ்ச்சியான உரை

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி நான்கிலும் தோல்வி அடைந்துள்ள நிலையில் வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் மும்பை அணியின் உரிமையாளர் நீடா அம்பானி ஆடியோ செய்தி அனுப்பி உள்ளார். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த செய்தியில் நீடா அம்பானி கூறியிருப்பதாவது: உங்கள் அனைவர் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது, நாம் கண்டிப்பாக வெற்றி அடைவோம் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். தற்போது நாம் தோல்வியை சந்தித்தாலும் நீங்கள் உங்கள் மீது நம்பிக்கையை கைவிடாமல் இருந்தால் இனி நாம் கண்டிப்பாக ஜெயிப்போம். நான் தான் ஜெயிக்க போகிறோம் என்று முதலில் நாம் நம்ப வேண்டும். இது போன்ற சூழ்நிலையை நாம் பலமுறை சந்தித்துள்ளோம், பின்னர் முகவரி கோப்பையையும் வென்றுள்ளோம். அதேபோல் நீங்கள் நம்பிக்கையுடன் இருந்தால் இந்த முறையும் நாம் கோப்பையை வெல்ல முடியும்.

அணியில் உள்ள ஒவ்வொருவரும் மற்றவர் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நான் உங்களை விரைவில் நேரில் சந்திப்பேன், அதுவரை எனது முழு ஆதரவு உங்கள் அனைவருக்கும் உண்டு .

நீங்கள் உங்களுக்குள் ஒருவரை ஒருவர் நம்புங்கள். உங்கள் நம்பிக்கை மீது உடன் இருங்கள். நம்பிக்கையை இழக்க வேண்டாம். மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் எப்போதும் உங்களுக்கு ஆதரவாக இருக்கும்; என்று அந்த ஆடியோவில் கூறப்பட்டுள்ளது. இது குறித்த வீடியோ மும்பை இந்தியன்ஸ் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.