4 நாள் உடையுடன் 2 மாதங்கள் அபுதாபியில் சிக்கித்தவிக்கும் நடிகை

  • IndiaGlitz, [Friday,May 22 2020]

பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் நான்கு நாட்கள் பயணமாக கடந்த மார்ச் மாதம் அபுதாபி சென்ற நிலையில் ஊரடங்கு காரணமாக இரண்டு மாதங்களாக அந்நாட்டில் சிக்கி தவித்து வரும் தகவல் தற்போது வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பாலிவுட் நடிகை மௌனி ராய் கடந்த மார்ச் மாதம் விளம்பர படமொன்றின் படப்பிடிப்பிற்காக அபுதாபி சென்றார். அந்த விளம்பர படத்தின் படப்பிடிப்பு ஒரு சில நாட்கள் மட்டுமே நடைபெறும் என்பதால் நான்கு நாட்களுக்குத் தேவையான உடைகளை மட்டுமே அவர் எடுத்துச் சென்றுள்ளார். இதனிடையில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே திடீரென கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் உலகம் முழுவதும் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் அபுதாபியில் கடந்த இரண்டு மாதங்களாக நான்கு நாட்களுக்கு தேவையான உடைகளோடு நடிகை மெளனிராய் சிக்கி தவித்து வருகிறார்

இது குறித்து அவர் கூறியபோது ’இப்படி ஒரு நிலைமை வரும் என்று நான் நினைத்து கூட பார்க்கவே இல்லை என்றும் ஒவ்வொரு நாளும் விமானங்கள் எப்போது கிளம்பும் என்பதை தெரிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகவும் இருப்பினும் இங்கு ஒருசில நண்பர்கள் இருக்கின்ற காரணத்தினால் தனக்கு நிம்மதியாக இருப்பதாகவும் விரைவில் இந்தியாவிற்கு திரும்ப தான் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

இந்த ஊரடங்கில் தனக்கு மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு நல்ல பாடத்தை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். நடிகை மெளனிராய் கடந்த இரண்டு மாதங்களாக அபுதாபியில் சிக்கி தவித்து வரும் தகவல் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

More News

கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸிகுளோகுயின் நிரூபிக்கப்படாத ஒன்று!!! இறுதி முடிவு வெளிட்ட WHO!!!

கொரோனா சிகிச்சைக்கு ஏற்ற மருந்தைப் பற்றி விஞ்ஞான உலகம் இதுவரை எந்த உறுதியான தகவலையும் வெளியிடவில்லை

உணவு மூலம் கொரோனா பரவுமா??? WHO என்ன சொல்கிறது???

“கொரோனா வைரஸ் உணவு மூலம் பரவும்” எனச் சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்ற தகவலை WHO டிவிட்டர் மூலம் தெளிவுபடுத்தி இருக்கிறது

நிரந்தர Work from Home வேலைக்கு ஆகாது!!! மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் CEO கருத்து!!!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சில மாதங்கள் உலகமே முடங்கி கிடந்தது. இந்நிலையில் தொழில்நுட்ப ஜம்பவான்களான பேஸ்புக்,

எதுவுமே உண்மையில்லை: 'சுல்தான்' படம் குறித்து விளக்கமளித்த எஸ்.ஆர்.பிரபு

கார்த்தி நடித்து முடித்துள்ள திரைப்படம் 'சுல்தான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் கிட்டத்தட்ட நிறைவடையும் நேரத்தில் திடீரென கொரோனா வைரஸால்

தமிழகத்தில் இன்றும் 700க்கும் மேல் கொரோனாவால் பாதிப்பு: சென்னையில் வழக்கம்போல் அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னையில் தினமும் 500க்கும் மேற்பட்டோர் கடந்த சில நாட்களாக கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு .