கொரோனாவால் சிகிச்சை பெற்று வரும் மகளின் வருகைக்காக காத்திருக்கும் தாயின் சடலம்!

இங்கிலாந்து நாட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தாய் மற்றும் மகள் ஆகிய இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனாவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மகளின் வருகைக்காக தாயாரின் சடலம் காத்திருப்பதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டின் கேம்ப்ரிட்ஜ்ஷையர் பகுதியில் வசித்து வந்தவர் அனுசுயா சந்திரமோகன். இவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனை அடுத்து இவருடைய மகளும், இங்கிலாந்து அரசு மருத்துவமனை நர்ஸ் பணி செய்பவருமான ஜெனிபர் என்பவருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் தாய், மகள் இருவரும் ஒரே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் அனுசுயா சந்திரமோகன் சிகிச்சையின் பலன் இன்றி திடீரென உயிரிழந்தார். இதனை அடுத்து அவரது குடும்பத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அவரது மகள் ஜெனிபர் வரும் வரை அவரது சடலத்தை பாதுகாக்க முடிவு செய்தனர். இதனை அடுத்து சவ பராமரிப்பு மையத்தில் அவருடைய உடலை பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

ஜெனிஃபர் குணமடைந்து வீடு திரும்பி வரும்வரை எவ்வளவு செலவானாலும் அனுசுயாவின் உடலை பாதுகாக்க தயாராக இருக்கிறோம் என்றும் அனுசுயாவின் உடலை அவரது மகள் ஜெனிபர் வந்துதான் இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

மும்பையில் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட 20 கடற்படை மாலுமிகள்!!!

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம்,

ஊரடங்கை தளர்த்த கோரும் அமெரிக்க மாகாணங்கள்!!! பதறும் சுகாதாரத்துறை அதிகாரிகள்!!!  

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்தைத் தாண்டியிருக்கிறது. அதேபோல பலி எண்ணிக்கையும் 35 ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது.

கொரோனாவில் இறந்தவர்களின் பலி எண்ணிக்கையை சீன அரசு மறைக்கிறதா??? தொடரும் குற்றச்சாட்டுகளுக்கான பதில்!!!

சீனாவின் வுஹாண் மாகாணத்தில் கொரோனா நோய்த்தொற்றில் இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து வெளியிட்டதாக அமெரிக்கா முதற்கொண்டு பல மேற்கத்திய நாடுகள் கடுமையாகக் குற்றம்சாட்டி வந்தன.

கொரோனா விடுமுறையில் வயலில் உழுத பிரபல நடிகை!

கொரோனா விடுமுறை வந்தாலும் வந்தது, தமிழ் திரை உலகில் உள்ள பிரபல நடிகர் நடிகைகள் பலர் தங்களுடைய சமூக வலைதளங்களில் வித்தியாசமான, காமெடியான, சீரியசான வீடியோக்களை பதிவு செய்து ரசிகர்களை

நடு ரோட்டில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 'விசாரணை' பட எழுத்தாளர்!

நடுரோட்டில் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு வெற்றிமாறன் இயக்கிய 'விசாரணை' படத்தின் கதையை எழுதிய ஆட்டோ சந்திரன் என்பவர் நடுரோட்டில் பிரசவம் பார்த்தது