கொசு கடித்தால் கொரோனா வருமா??? அதிர்ச்சி ஏற்படுத்தும் புது ஆய்வுத் தகவல்!!!

  • IndiaGlitz, [Saturday,June 27 2020]

 

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அதன் அறிகுறிகள், நோய்த் தாக்கம் குறித்து உலகம் முழுவதும் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் பற்றி உலகம் முழுவதும் வதந்திகளும் அச்சங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபரின் நீர்த் துளிகளில் இருந்து பரவும் தன்மைக் கொண்டது என்பதால் அதன் பல்வேறு தன்மைகள் குறித்தும் மக்களிடையே அச்சம் இருந்து கொண்டே இருக்கிறது.

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் கொசுக் கடித்தால் கொரோனா வைரஸ் பரவாது என்ற தகவலை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெளிவுபடுத்தி இருந்தது. மத்தியச் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் செயலாளர் லால் அகர்வால் இது குறித்து தெளிவான விளக்கத்தை அளித்து இருந்தார். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபரைக் கடித்த கொசுக்களால் பரவ வாய்ப்பில்லை என்று கூறியிருந்தார். இதே போன்ற கருத்தை இத்தாலியில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றும் தெளிவுபடுத்தி இருக்கிறது. இத்தாலியின் தேசிய சுகாதாரக் கழக விஞ்ஞானிகள் “கொசுக்களால் கொரோனா வைரஸை கடத்த முடியுமா” என்கிற ரீதியில் ஆய்வை மேற்கொண்டு இருந்தனர். இந்த ஆய்வின் முடிவில் சாதாரண கொசுக்களாலும் வேறு எந்த வகை கொசுக்களாலும் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு 1 கோடியை நெருங்குகிறது. இதுவரை 49 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். படுமோசமாக அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகள் திண்டாடி வருகின்றன. அடுத்ததாக ரஷ்யா, இந்தியா, பிரிட்டன், ஸ்பெயின் போன்ற நாடுகள் பாதிக்கப் பட்டுள்ளன. கொரோனா சுவடே தெரியாமல் இருந்த பல ஆப்பிரிக்க நாடுகளும் தற்போது முன்னணி வரிசைக்கு வந்திருக்கிறது. இந்நிலையில் மனிதர்கள் மீதான தடுப்பு மருந்து சோதனையை சில நாடுகள் வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது. உலகத்திலுள்ள ஒட்டுமொத்த மக்களின் நம்பிக்கையாக கொரோனா தடுப்பு மருந்து மட்டுமே இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

கொலை வெறியில் இராணுவ பயிற்சி மேற்கொள்ளும் சீன வீரர்கள்!!! உறையும் பனியில் சாகசம்!!!

உலகிலேயே சீன இராணுவம் மிகவும் வலிமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சீன இராணுவ வீரர்களுக்கு கோடைக்காலம் மட்டுமல்லாது குளிர்காலத்திலும் மிகக் கடுமையான பயிற்சிகள் வழங்கப் படுகின்றன.

செய்திப் பிரிவில் வேலைக்கு சேர்ந்த முதல் நாள்....: ப்ரியா பவானிசங்கரின் 'சாத்தான்குளம்' பதிவு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் என்ற பகுதியில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஃபென்னிக்ஸ் ஆகியோர் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட பத்து நிமிடங்கள் அதிக நேரம் கடை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு,

மேலும் ஒரு திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று: அதிர்ச்சியில் தொண்டர்கள்!

கொரோன வைரஸ் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களையும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படுத்தி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

என்னுடைய மரணத்திற்கு இன்னும் யார் யாரெல்லாம் இரங்கல் தெரிவிக்கவில்லை: ஆபாச நடிகையின் பரபரப்பு டுவீட்

  ஆபாச பட நடிகை சன்னி லியோன் போலவே, ஆபாச திரையுலகில் பெரும் புகழ்பெற்றவர் மியா கலிஃபா. இவர் கடந்த சில ஆண்டுகளாக ஆபாச தொழிலில் இருந்து விலகி விட்டதாகவும்

இவங்களுக்கு நாங்கள் விசா கொடுக்கவே மாட்டோம்: ஓர வஞ்சனை காட்டும் அமெரிக்கா!!!

அமெரிக்கா வெளியுறவு செயலாளர் மைக் பாம்பியா ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.