பெட்ரோல் இவ்வளவு மலிவா??? ஆச்சரியத்தை ஏற்படுத்தும் நிறுவனம்!!!

  • IndiaGlitz, [Tuesday,May 12 2020]

பிரிட்டனில் உள்ள பிரபல பெட்ரோல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் சல்லிசாக பெட்ரோலை விற்பனை செய்து வருகிறது. தொடர்ந்து நிலவும் கச்சா எண்ணெயின் சரிவால் இந்த முடிவை எடுத்து இருப்பதாகவும் அந்நிறுவனம் தகவல் வெளியிட்டு இருக்கிறது. பிரிட்டன் முழுக்க உள்ள மோரிசன் பெட்ரோல் நிறுவனத்தின் பங்குகளில் 1 பவுண்டு கொடுத்தாலே போதும் 1 லிட்டர் பெட்ரோலை பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் 50 பெட்ரோலை வாங்கும்போது வாடிக்கையாளர்களுக்கு 4.50 பவுண்டுகள் லாபம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைக்காக பெட்ரோல் உற்பத்தியின் அளவை ஒபேக் நாடுகள் 10 விழுக்காடு குறைத்து இருக்கிறது. ஏற்கனவே டெண்டர் கொடுக்கப்பட்ட நிறுவனங்களின் உற்பத்தியால் பெட்ரோல், டீசல் போன்றவற்றின் உற்பத்தியை தொடர்ந்து குறைக்க முடியாமலும், அதைத் தேக்கி வைப்பதற்கான கலன்கள் இல்லாமல் பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகள் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் பெட்ரோல் விலையில் கடும் சரிவு ஏற்பட்டு இருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் இருந்து பிரிட்டன் முழுவதும் ஒரு சில நிறுவனங்கள் 1 பவுண்டுக்கு பெட்ரோலை விற்றாலும் மோரிசன் நிறுவனம் தொடர்ந்து நாடு முழுவதும் இந்தத் திட்டத்தை அமல்படுத்தி இருக்கிறது. இந்த நிறுவனத்தைத் தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் பெட்ரோல் விலையை கணிசமாகக் குறைக்கும் எனவும் எதிர்ப் பார்க்கப்படுகிறது.

More News

பெண்களைவிட ஆண்கள் கொரோனாவால் அதிகம் உயிரிழக்கின்றனர்!!! அச்சமூட்டும் புது ஆய்வு!!!

கொரோனா வைரஸால் உயிரிழக்கும் பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கை அதிக&

ஒரு குடும்பத்தின் 11 பெண்களை ஒரே ஒரு போன்காலில் காப்பாற்றிய தளபதி விஜய்

சென்னையை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பெண்கள் தூத்துக்குடியில் 40 நாட்கள் தவித்து வந்த நிலையில் ஒரே ஒரு போன்காலில் அந்த 11 பெண்களையும் காப்பாற்றிய தளபதி விஜய்

10ஆம் வகுப்பு தேர்வு தேதி மற்றும் அட்டவணை: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

10ஆம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 27ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால்

சம்பளம் போட பணமில்லை: பெருமாளுக்கே வந்த பெருஞ்சோதனை

உலகிலேயே மிக அதிக வருமானம் உள்ள கோவில்களில் ஒன்றான திருப்பதி கோவிலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லை என்ற தகவல் வெளியே வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

50% சம்பளத்தை குறைக்க தயார்: பிக்பாஸ் நடிகர் அறிவிப்பு 

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு எதுவும் நடக்காததால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பது தெரிந்ததே