இந்தியாவில் ஒரே நாளில் 6000க்கும் மேல் கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று 1,12,359ஆக இருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 6000க்க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

இன்று இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,18,447ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 6088 பேர்கள் கொரோனாவுக்கு புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 45,300ல் இருந்து 48,534ஆக உயர்ந்துள்ளது என்றும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,435ல் இருந்து 3,583ஆக உயர்ந்துள்ளது என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த மாநிலமான மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41642 என்றும், இரண்டாவது இடத்தில் உள்ள தமிழகத்தில் 13967 பேர் பாதிக்கப்பட்டதாகவும், மூன்றாவது இடத்தில் குஜராத்தில் 12905 பேர்களும்,, நான்காவது இடத்தில் டெல்லியில் 11659 பேர்களும், ஐந்தாவது இடத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் 6227 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,194,879ஆக உயர்ந்துள்ளது என்பதும், உலக அளவில் பலி எண்ணிக்கை 3,34,092 என்பதும் உலக அளவில் 2,081,511 பேர்கள் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் 16,20,767 பேர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ரஷ்யாவில் 317,554 பேர்களும், பிரேசிலில் 310,921 பேர்களும், ஸ்பெயினில் 280,117 பேர்களும், இத்தாலியில் 228,006 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

More News

டிக்டாக் லைக்ஸ்களுக்காக பூனையை தூக்கில் போட்டு வீடியோ எடுத்த வாலிபர் கைது!

டிக் டாக்கில் லைக்ஸ்கள் பெறுவதற்காக எந்த ரிஸ்க்கும் எடுக்க இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தயாராக இருப்பது டிக்டாக்கில் வெளிவரும் வீடியோக்களில் இருந்து தெரிய வருகிறது.

4 நாள் உடையுடன் 2 மாதங்கள் அபுதாபியில் சிக்கித்தவிக்கும் நடிகை

பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் நான்கு நாட்கள் பயணமாக கடந்த மார்ச் மாதம் அபுதாபி சென்ற நிலையில் ஊரடங்கு காரணமாக இரண்டு மாதங்களாக அந்நாட்டில் சிக்கி தவித்து வரும் தகவல்

கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸிகுளோகுயின் நிரூபிக்கப்படாத ஒன்று!!! இறுதி முடிவு வெளிட்ட WHO!!!

கொரோனா சிகிச்சைக்கு ஏற்ற மருந்தைப் பற்றி விஞ்ஞான உலகம் இதுவரை எந்த உறுதியான தகவலையும் வெளியிடவில்லை

உணவு மூலம் கொரோனா பரவுமா??? WHO என்ன சொல்கிறது???

“கொரோனா வைரஸ் உணவு மூலம் பரவும்” எனச் சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்ற தகவலை WHO டிவிட்டர் மூலம் தெளிவுபடுத்தி இருக்கிறது

நிரந்தர Work from Home வேலைக்கு ஆகாது!!! மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் CEO கருத்து!!!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சில மாதங்கள் உலகமே முடங்கி கிடந்தது. இந்நிலையில் தொழில்நுட்ப ஜம்பவான்களான பேஸ்புக்,