இந்தியாவில் 46 ஆயிரத்தை தாண்டிய கொரோனா தொற்று

இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஆயிரம் முதல் இரண்டாயிரம் வரை கொரோனாவின் தாக்குதல் அதிகரித்து கொண்டே இருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 3500க்கும் மேற்பட்டோர்களுக்கு கொரோனா தொற்று பரவியிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 42,836ஆக இருந்த நிலையில் இன்று 46,433 ஆக உயர்ந்துள்ளது. இதனால் 3597 பேர் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,389 லிருந்து 1,568 ஆக அதிகரித்துள்ளதால் ஒரே நாளில் 179 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 11,762 லிருந்து 12,727 ஆக உயர்ந்துள்ளது

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 36,42,508 ஆக உயர்ந்துள்ளது என்பதும், உலக அளவில் கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 11,94,246ஆகவும், கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,52,214ஆகவும் உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் அமெரிக்காவில் 12,12,835 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இத்தாலியில் 211,938 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இங்கிலாந்தில் 190,584 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பிரான்ஸ் நாட்டில் 169,462 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஜெர்மனியில் 166,152 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ரஷ்யாவில் 145,268 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
 

More News

அசோக்செல்வனின் அடுத்த படத்தில் நாயகியாகும் விஜய்சேதுபதி பட நடிகை!

நடிகர் அசோக்செல்வன் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஓ மை காட்' திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் வசூல் அளவிலும் மிகப்பெரிய வெற்றிப்படம் என்பதும் தெரிந்ததே.

கொரோனா பரவல் தடுப்பு: உலகின் எந்தெந்த நாடுகளில் முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும்???

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களின் நீர்த்துளிகள் மூலம் பரவுகிறது. எனவே நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முகக்கவசம்,

கொரோனா: BGC காசநோய்த் தடுப்பூசியை மனிதர்கள்மீது  பரிசோதிக்கும் அமெரிக்கப் பல்லைக்கழகம்!!!

முன்னதாக காசநோய் தடுப்பூசி அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ள நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைவாக இருக்கிறது என ஒரு ஆய்வு வெளியாகி இருக்கிறது.

தமிழகத்திலும் திறக்கப்படுகிறது டாஸ்மாக் கடைகள்: அரசு உத்தரவு

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை சமீபத்தில் அறிவித்தது.

மதுபானம் வாங்க பெண்கள் வரிசை: பிரபல இயக்குனர் விமர்சனம்

நாடு முழுவதும் இன்று மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஊரடங்கில் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு ஒரு சில தளர்வுகளை அறிவித்துள்ளது என்பது தெரிந்ததே.