இந்தியாவில் 35 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 1793 பேர்

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33,610 லிருந்து 35,403ஆக அதிகரித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 1793 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,075லிருந்து 1,147 ஆக உயர்ந்துள்ளதால் கடந்த 24 மணி நேரத்தில் 77 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,373 லிருந்து 8,889 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனாவால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இம்மாநிலத்தில் மட்டும் 10,498 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் மகாராஷ்டிராவில் இதுவரை 1,773 பேர் குணமடைந்ததாகவும், 459 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,04,140 பேர்கள் என்பதும், உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233,829 பேர்கள் என்பதும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,039,055 பேர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் இதுவரை 10,95,019 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஸ்பெயினில் 239,639 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இத்தாலியில் 205,463 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இங்கிலாந்தில் 171,253 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரான்ஸில் 167,178 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

More News

மார்க்கெட்டை மாற்றியும் மாறாத மக்கள்: கொரோனாவுக்கு கொண்டாட்டம்தான்

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் பழங்கள் மற்றும் பூக்கள் மொத்த விலையிலும் சில்லறை விலையிலும் விற்பனை ஆகி வந்ததால் பொதுமக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருந்தது

ரஜினி வசனம் மூலம் கொரோனா விழிப்புணர்வு செய்த அஜித்-விஜய் நாயகி

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இந்த வைரஸ் குறித்த விழிப்புணர்வை அவ்வப்போது திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது

ஒரே நாளில் 22, மொத்தம் 38: கொரோனாவை உற்பத்தி செய்யும் கோயம்பேடு மார்க்கெட் 

கோயம்பேடு மார்க்கெட் கொரோனாவை உற்பத்தி செய்யும் மார்க்கெட்டாக மாற வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே எச்சரிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒரே நாளில் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள

தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை தளர்த்த வாய்ப்பில்லை: மருத்துவ நிபுணர் குழு தகவல்

தமிழ்நாட்டில், ஒட்டு மொத்தமாக ஒரே நேரத்தில் ஊரடங்கை தளர்த்த வாய்ப்பு இல்லை என தமிழக அரசு நியமித்துள்ள மருத்துவ ஆலோசனைக்குழு, தெரிவித்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ரிஷிகபூரின் இறுதி சடங்கிற்காக 1400 கிமீ பயணம் செய்யும் மகள்!

உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமான பிரபல பாலிவுட் நடிகர் ரிஷிகபூர் இறுதிசடங்கில் கலந்து கொள்வதற்காக அவரது மகள் டெல்லியில் இருந்து மும்பைக்கு 1,400 கிலோ மீட்டர் பயணம் செய்ய உள்ளதாக