இந்தியாவில் கொரோனா பாதிப்பு:  33 ஆயிரத்தை தாண்டியதால் பரபரப்பு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் ஆயிரத்திற்கும் மேல் உள்ள நிலையில் நேற்று இந்தியாவில் 31,332 பேருக்கு பாதிப்பு இருந்த நிலையில் இன்று சுமார் 2000 பேர்களுக்கு பாதிப்பு அதிகரித்துள்ளது.

சற்றுமுன் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33,050 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,008லிருந்து 1,074 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 7,797 லிருந்து 8,325 ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் உலகம் அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 32,19,242 ஆக உயர்ந்துள்ளதாகவும், உலக அளவில் இதுவரை கொரோனாவால் 2,28,194 பேர்கள் பலியாகி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் 10,64,194 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் மூன்றில் ஒரு பங்கு அமெரிக்காவில் தான் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவை அடுத்து ஸ்பெயினில் 236,899 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இத்தாலியில் 203,591 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பிரான்சில் 166,420 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இங்கிலாந்தில் 165,221 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஜெர்மனியில் 161,539 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

More News

ஜோதிகா புகார் கூறிய மருத்துவமனையில் பிடிபட்ட 10 பாம்புகள்!

நடிகை ஜோதிகா சமீபத்தில் சினிமா விழா ஒன்றில் பேசியபோது, 'தஞ்சை மருத்துவமனைக்கு படப்பிடிப்பின் போது தான் சென்றதாகவும் அப்போது அங்கு பராமரிப்பு சரியில்லாமல் இருப்பதை

கொரோனாவிற்கு சென்னையை சேர்ந்த இளம்பெண் பலி!

தமிழகத்தில் இன்று கொரோனாவிற்கு 104 பேர் பாதிக்கப்பட்டனர் என்றும், அதில் 94 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இர்ஃபான்கான் மறைவிற்கு மோடி, சச்சின், கமல் இரங்கல்!

கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கபப்ட்ட பாலிவுட் நடிகர் இர்ஃபான்கான் நேற்று திடீரென மூச்சுத்திணறலால் அவதிப்பட்டதால் மும்பையில் உள்ள மருத்துவமனையில்

சென்னையில் மிக அதிக பாதிப்பு: இன்றைய கொரோனா நிலவரம்

தமிழகத்தில் இன்று மட்டும் மேலும் 104 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை

மத்திய அரசின் அதிரடி உத்தரவால் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நிம்மதி

கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரங்கில் பெரும் பிரச்சனையாக இருப்பது வெளி மாநிலங்களில் இருந்து வேலை நிமித்தமாக புலம்பெயர்ந்து இருக்கும் தொழிலாளர்கள் தான்.