உலக அளவில் 26 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

உலக அளவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தகவல் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 26,38,024ஆக உயர்ந்துள்ளது. சராசரியாக கடந்த சில நாட்களாக தினமும் ஒரு லட்சம் பேர் பாதிப்பு அடைந்து வருகின்றனர் என்பது அதிர்ச்சியான செய்தியாக உள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,84,235ஆகவும், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 7,21,734ஆகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கொரோனாவுக்கு உலகிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா தான். இந்நாட்டில் 849,092 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 47,681 பேர் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஸ்பெயினில் 208,389 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 21,717 பேர் பலியாகியுள்ளனர். இத்தாலியில் 187,327 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 25,085பேர் பலியாகியுள்ளனர். பிரான்ஸில் 21,340 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 25,085 பேர் பலியாகியுள்ளனர். ஜெர்மனியில் 150,648 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 5,315 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தியாவை பொருத்தவரை இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,450 என்றும், கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 681 என்றும், இதுவரை கொரோனாவில் இருந்து 4,373 பேர் குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலகிலேயே மிகக்குறைவாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடு ஏமன். இங்கு ஒரே ஒருவர் மட்டுமே கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

காகித தாளில் உடை: பிரபல நடிகையின் அட்டகாசம்

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஒருபக்கம் ஏழை எளிய மக்கள் பசியிலும் பட்டினியிலும் வாடிக் கொண்டிருக்கும் நிலையில்

ஊரடங்கால் பசி பட்டினி: ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை

தெலுங்கானாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ஊரடங்கு காலத்தை சமாளிக்க முடியாமல், கையில் பணம் இல்லாததால் தற்கொலை செய்துள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு பூனைகளுக்கு கொரோனா தொற்று: அதிர்ச்சி அடைந்த அமெரிக்கா

உலகம் முழுவதிலும் அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் இந்த வைரஸிற்கு லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்தும், உயிரிழந்தும் வருகின்றனர்

முதல்முறையாக ரசிகர்களுடன் உரையாடும் ஏ.ஆர்.ரஹ்மான்!

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து அனைத்து சினிமா நட்சத்திரங்களும், பிரபலங்களும் தங்களுடைய ரசிகர்களை தொடர்பு கொள்ள பயன்படுத்தும்

சிரஞ்சீவி விடுத்த சவாலை ஏற்பாரா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்?

கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து சினிமா நட்சத்திரங்கள் அனைவரும் தற்போது வீட்டில் சும்மா இருக்கிறார்கள் என்பது தெரிந்ததே.