வங்கி கணக்கில் பணம்: விஜய் கொடியேற்றிய தினத்தில் ரஜினி செய்த தரமான செயல்..

  • IndiaGlitz, [Friday,August 23 2024]

தளபதி விஜய் நேற்று தனது தமிழக வெற்றி கழகத்தின் கொடியை அறிமுகம் செய்து ஏற்றிய நிலையில் அதே நாளில் ரஜினிகாந்த் மாணவ மாணவிகளுக்கு அவர்களுடைய வங்கி கணக்கில் கல்வி உதவிக்காக தனது சொந்த பணத்தை அனுப்பி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக பரிந்துரை செய்யப்பட்ட மாணவர்களின் கல்வி கட்டணத்தை ரஜினிகாந்த் வழங்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நமது அன்புத்தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க மத்திய தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் வழிகாட்டுதல் படி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் முழுவதிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான கல்வி கட்டணம் நேரடியாக அவர்களின் கல்லூரி வங்கி கணக்கில் வழங்கப்பட்டுள்ளது.

எங்களின் பரிந்துரையை ஏற்று அனைவருக்கும் கல்வி கட்டணம் வழங்கிய தலைவர் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

நேற்று விஜய் தனது அரசியல் கட்சியின் கொடியை ஏற்றியவுடன் விஜய் ரசிகர்கள் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் ஒதுங்கிக் கொண்டது குறித்து மீம்ஸ்களை பதிவு செய்த நிலையில் அதே நாளில் ரஜினிகாந்த் மாணவர்களுக்கு தன்னுடைய சொந்த பணத்திலிருந்து கல்வி கட்டணத்தை செலுத்தி இருக்கும் தரமான சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

நாங்க சோத்துக்கு கஷ்டபடுறத  நீ வந்து பாத்தியா ? பயில்வான் ரங்கநாதனுக்கு  சுருளிராஜன் மனைவி பதிலடி..!

நடிகர் பயில்வான் ரங்கநாதன், சுருளி ராஜனுக்கு மது பழக்கம் இருந்தது என்றும் சோத்துக்கு அவரது குடும்பம் கஷ்டப்பட்டதாகவும் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறிய நிலையில்

கிரிக்கெட் அணி உரிமையாளராகும்  கீர்த்தி சுரேஷ்.. சமந்தாவும் ஒரு அணி உரிமையாளர்..!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளான சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் விளையாட்டுத் துறையில் களம் இறங்கி இருப்பதாகவும் அவர்கள் விளையாட்டு

சொர்க்கத்துக்கு யார் செல்வார்.? நரகத்துக்கு யார் செல்வார்.? -ரங்கராஜன் நரசிம்மன்

பிரபல ஆன்மீக பேச்சாளர் ரங்கராஜன் நரசிம்மன் அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் அளித்த இரண்டாவது பேட்டியில் ஆன்மீகத்தின் அடிப்படை கேள்விகளுக்கு ஆழமான விளக்கம் அளித்துள்ளார்.

மிகப்பெரிய சோதனை செய்திருக்கிறார்கள்.. மஞ்சுவாரியர் படம் குறித்து அனுராக் காஷ்யப்..!

மஞ்சுவாரியர் நடித்த மலையாள திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை பார்த்த பிரபல பாலிவுட் நடிகர் மற்றும் இயக்குனர் அனுராக் காஷ்யப் இது ஒரு பெரிய சோதனை

பா ரஞ்சித் அடுத்த படத்தின் ஹீரோ இவரா? அப்ப வெற்றிமாறன் படம் என்ன ஆச்சு?

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான 'தங்கலான்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்ற நிலையில் தற்போது அவர் அடுத்த படத்திற்கு தயாராகி விட்டதாக