12 லட்சமாக மாறிய பணப்பெட்டியின் மதிப்பு.. பூர்ணிமா, மாயா ஆழ்ந்த யோசனை.. யார் எடுப்பார்கள்?

  • IndiaGlitz, [Thursday,January 04 2024]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க் வைக்கப்பட்டுள்ள நிலையில் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு ஒரு போட்டியாளர் வெளியேறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பணப்பெட்டியின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

முதல் நாள் ஒரு லட்சமாக இருந்த பணப்பெட்டியின் மதிப்பு நேற்று 9 லட்சம் ஆக உயர்ந்த நிலையில் தற்போது அது 12 லட்சம் ஆக மதிப்பு உயர்ந்துள்ளது. இதனை அடுத்து போட்டியாளர்கள் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு செல்லலாமா? என்று யோசிக்க ஆரம்பித்து விட்டனர்.

குறிப்பாக மாயா மற்றும் பூர்ணிமா இது குறித்து ஆழ்ந்த யோசனை செய்கின்றனர். பணப்பெட்டியை எடுக்கலாமா வேண்டாமா என்று யோசனையாக இருக்கிறது என்று பூர்ணிமா கூற, எடுப்பது பெஸ்ட் சாய்ஸ் தான் என்று மாயா கூறுகிறார். இதை வைத்து பார்க்கும் போது பூர்ணிமா பணப்பெட்டியை எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இன்னொரு பக்கம் விஷ்ணு, மணி மற்றும் தினேஷ் ஆகிய மூவரும் பணப்பெட்டியை எடுக்கும் ஐடியாவில் இல்லை என்பது இன்றைய புரமோவில் இருந்து தெரிகிறது. அப்படி என்றால் மாயா குரூப்பில் உள்ள ஒருவர்தான் பணப்பெட்டியை எடுப்பாரோ என்ற எண்ணம் பார்வையாளர்களுக்கு தோன்றி உள்ளது.

More News

'அயலான்' இசை வெளியீட்டு விழா எந்த நாட்டில்? எப்போது? சிவகார்த்திகேயன் அறிவிப்பு..!

சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கிவிட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

'கேப்டன் மில்லர்' நிகழ்ச்சியில் தொகுப்பாளினியிடம் அடி வாங்கியவர் யார்? என்ன நடந்தது..!

சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த ரசிகர் ஒருவர் தொகுப்பாளினி ஐஸ்வர்யாவிடம்

1+1 is 3.. கர்ப்பமானதை க்யூட்டாக தெரிவித்த அமலாபால்.. புகைப்படங்கள் வைரல்..!

நடிகை அமலாபால் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர் தற்போது கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

மாஸ் நடிகர்களுக்கு இணையாக கவின் படத்தின் பிசினஸ்: ஆச்சரியத்தில் கோலிவுட் திரையுலகினர்..!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகரான கவின் நடித்துள்ள அடுத்த திரைப்படம் மாஸ் நடிகருக்கு இணையாக பிசினஸ் ஆகி கொண்டிருப்பதை பார்த்து கோலிவுட் திரையுலகினர் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

ஜிவி பிரகாஷ் அடுத்த படத்தின் சென்சார் தகவல்கள்.. ரிலீஸ் எப்போது?

தமிழ் திரை உலகில் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என இரண்டு துறைகளிலும்  பிஸியாக இருப்பவர் என்றால் அது ஜிவி பிரகாஷ் மட்டுமே என்பதும்  இரண்டு துறைகளிலும் அவர் தொடர்ச்சியாக வெற்றி பெற்று