இன்னும் நிறைய சஸ்பென்ஸ் காத்திருக்கு: 'த்ரிஷயம் 2' குறித்து மோகன்லால்!

  • IndiaGlitz, [Wednesday,February 10 2021]

பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’த்ரிஷ்யம்’. இந்த திரைப்படம் தமிழ் உள்பட பல்வேறு தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட்டிலும் ரீமேக் செய்யப்பட்டது என்பதும் கிட்டத்தட்ட அனைத்து மொழிகளிலும் இந்த படம் வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தமிழில் கமலஹாசன் நடிப்பில் வெளியான ’பாபநாசம்’ திரைப்படம் ரூ 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ’த்ரிஷ்யம்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கும் நிலையில் விரைவில் இந்த படம் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் இந்த படம் குறித்து நமக்கு பிரத்யேகமாக பேட்டியளித்த நடிகர் மோகன்லால் ’த்ரிஷ்யம் 2’ படத்தில் இன்னும் அதிகமான சஸ்பென்ஸ் காத்திருக்கிறது என்று தெரிவித்தார். முதல் பாகத்தில் இருப்பது போலவே இரண்டாம் பாகத்திலும் உறவுகளில் நெருக்கம் குறித்தும், பார்வையாளர்களை கவரும் வகையில் செண்டிமெண்ட் மற்றும் சஸ்பென்ஸ் இருக்கும் என்றும் கூறியுள்ளார்

மேலும் இந்த படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கப்போகும் விமர்சனத்திற்கு வெகுவாக காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு நல்ல ஒரு அனுபவமாக இருக்கும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார். இதேபோல் ’த்ரிஷ்யம்’ இரண்டாம் பாகத்தில் நடித்துள்ள மீனாவும் இந்த படம் கண்டிப்பாக ஆடியன்ஸ் அனைவருக்கும் பிடிக்கும் என்ற என்று கூறினார். மோகன்லால் மற்றும் மீனா அளித்த பேட்டியின் முழு வீடியோ இதோ:

More News

சனம்ஷெட்டியை மனதார பாராட்டிய தர்ஷன்!

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர் தர்ஷன், பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர் சனம்ஷெட்டி ஆகிய இருவர் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன் பிரச்சனைகள் இருந்து வந்த நிலையில்

நயன்தாரா படத்திற்கு பாராட்டுக்களை குவித்த நடிகர் கார்த்தி!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்த 'கூழாங்கல்' என்ற திரைப்படத்திற்கு சமீபத்தில் சர்வதேச டைகர் விருது கிடைத்துள்ள நிலையில்

ஊழியர்களுக்கு ரூ.700 கோடி போனஸா? அசத்தும் இந்திய முன்னணி நிறுவனம்!

இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாக இருந்து வரும் ஹெச்.சி.எல் தன்னுடைய ஊழியர்களுக்கு 700 கோடி ரூபாய் போனஸ் வழங்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

இந்திய அளவில் டிரெண்ட் ஆன சிம்புவின் 'குட் மார்னிங்' மெசேஜ்: அப்படி என்ன இருக்கு அதில்?

நடிகர் சிம்பு கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் அவருக்கு இருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை சிறிதளவு கூட குறையவில்லை என்பது அவ்வப்போது

ரத்தக் கலரில் வெள்ளப் பெருக்கு? விசித்திர சம்பவத்தால் அலறும் மக்கள்!

இந்தோனேஷியாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையால் பெக்கலோங்கன் நகர் முழுவதும் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது.