மோகன்லால் ஒரு கோழை.. பிரபல நடிகை ஆவேசம்..!

  • IndiaGlitz, [Friday,August 30 2024]

மோகன்லால் ஒரு கோழை என பிரபல நடிகை ஆவேசமாக கூறியிருப்பது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மலையாள திரையுலகில் கடந்த சில நாட்களாக நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சில முக்கிய நடிகர்கள், இயக்குனர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ஹேமா அறிக்கை காரணமாக மலையாள திரையுலகில் நடிகர் சங்கம் கலைக்கப்பட்டது என்பதும் நடிகர் சங்கத்தின் தலைவர் மோகன்லால் உள்பட அனைத்து நிர்வாகிகளும் ராஜினாமா செய்யப்பட்டனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் மோகன்லால் ராஜினாமா குறித்து கருத்து தெரிவித்த ’தங்கலான்’ உள்பட பல படங்களில் நடித்த நடிகை பார்வதி, மலையாள நடிகர் சங்கம் கலைக்கப்பட்ட செய்தியை கேட்டபோது இதுவரை சங்கத்தில் பொறுப்பில் இருந்தவர்கள் எந்த அளவுக்கு கோழைகள் என்பதை புரிந்து கொண்டேன். ஒரு பொறுப்பான நிலையில் இருக்கும் மலையாள நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்து, நடிகர் சங்கத்தை கலைத்திருப்பதை பார்க்கும்போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

ஹேமா கமிட்டி முன் வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தான் நடிகர் சங்க பொறுப்பாளர்கள் ராஜினாமா முடிவை எடுத்திருந்தார்கள். மலையாள நடிகர் சங்கத்தில் உள்ளவர்கள் எப்படி வேலை செய்வார்கள் எனக்கு தெரியும், நமது தேவைகளை பற்றி பேச நடிகைகளான என்னை போன்றவர்களுக்கு அங்கு உரிமை இல்லை, இந்த நிலை மாற வேண்டும் என்றால், சிறந்த தலைமை வரவேண்டும். வரும் காலத்தில் ஆவது மோகன்லால் போல் கோழைகள் தலைவராக இல்லாமல் நல்ல தலைவரை தேர்வு செய்ய வேண்டும்’ என்று ஆவேசமாக பேசினார். அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

ரஜினியின் 'கூலி' படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு என்ன கேரக்டர்? மாஸ் போஸ்டர் ரிலீஸ்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கூலி' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில்

முகேஷ் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தார்.. முன்னாள் மனைவியான பிரபல நடிகை திடுக் குற்றச்சாட்டு..!

மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக குற்றச்சாட்டுகள் கூறப்படும் நிலையில் இந்த குற்றச்சாட்டில் பிரபல நடிகர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை பார்த்து வருகிறோம்.

3 மணி நேரம் ரன்னிங் டைம் என்பது பயமாகத்தான் இருந்தது: வெங்கட் பிரபு..!

பொதுவாக ஒரு திரைப்படம் அதிகபட்சமாக 2:30 மணி இருந்தால் மட்டுமே வெற்றியடையும் என்று கூறப்பட்டு வருகிறது என்றும் மூன்று மணி நேரம் படம் என்பது ரசிகர்களை சலிப்படைய செய்யும் என்றும் கூறப்படுகிறது.

நாளை அஜித், விஜய், யுவன் நாள்.. வைரலாகும் வெங்கட்பிரபுவின் பதிவு..!

நாளை அதாவது ஆகஸ்ட் 31ஆம் தேதி அஜித், விஜய் மற்றும் யுவன் ஆகிய மூவருக்கும் மிகச்சிறந்த நாள் என்று இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

வாழ்க்கையை மாற்றும் முருகன் மந்திரம்! - ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார் !

ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் விஜய் குமார் அவர்கள், முருகன் திருப்புகழின் அற்புத சக்தி பற்றி விரிவாக விளக்கியுள்ளார்.