நயன்தாராவுடன் மனவருத்தம் ஏற்பட்டது உண்மைதான்: மோகன் ராஜா
Thursday, July 13, 2017 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'வேலைக்காரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படம் குறித்து சமீபத்தில் பேட்டியளித்த இயக்குனர் மோகன்ராஜா, 'சுழ்நிலைக்கேற்ற மாதிரி நீ மாறாதே, உனக்கேற்ற மாதிரி சூழ்நிலையை மாற்று` என்பதுதான் இந்த படத்தின் ஒன் லைன். அறிவு, ஆதி என்ற இரண்டு இளைஞர்களைப் பற்றிய கதைதான் படம்தான் வேலைகாரன்' என்று கூறினார்.
மேலும் 'தனி ஒருவன்' படத்தை இயக்கியபோதே நயன்தாராவுக்கும் எனக்கும் மனவருத்தம் ஏற்பட்டது என்பது உண்மைதான். என்னுடைய முழு கவனமும் மித்ரன் மற்றும் சித்தார்த் அபிமன்யூ கேரக்டரிலேயே இருந்தது. இந்த நிலையில் இரண்டு முக்கிய கேரக்டர்களுக்கு இடையே ஒரு பெரிய ஹீரோயினுக்கு, முக்கியத்துவம் கொடுக்காதது என் தவறுதான்.
இருப்பினும் 'தனி ஒருவன்' படத்தைப் பார்த்துட்டு நான் உங்களுக்கு இன்னும் கோ-ஆபரேட் பண்ணியிருக்கலாம்`ன்னு நயன்தாரா சொன்னாங்க. அதுதான் அவங்க பெருந்தன்மை. ஆனால் அந்த படத்தில் நடந்த தவறு 'வேலைக்காரன்' படத்தில் இருக்காது. இந்த படத்தில் மிருளாணி என்ற கேரக்டரில் நயன்தாரா சூப்பராக நடித்துள்ளார்கள்' என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
- logoutLogout
Login to post comment