"பிரதமருக்கு மட்டும் குடியுரிமைச் சான்றிதழ் தேவையில்லை"..! RTI கேள்விக்கு பிரதமர் அலுவலகம் பதில்.

  • IndiaGlitz, [Monday,March 02 2020]

குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதில் இருந்தே, இந்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, சுபங்கர் சர்கார் என்பவர் கடந்த ஜனவரி 17-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் குடியுரிமைச் சான்றிதழைக் கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இதற்கு பிரதமர் அலுவலகம் அளித்துள்ள பதிலில், ''பிரதமர் நரேந்திர மோடி, 1955 குடியுரிமைச் சட்டப் பிரிவு 3-ன்படி பிறப்பால் இந்தியாவின் குடிமகன். எனவே, அவர் குடியுரிமைச் சான்றிதழ் வைத்திருப்பது தொடர்பான கேள்விகளுக்கு இடமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பத்திரிகையாளர் சீமி பாஷா, ''குடியுரிமைச் சட்டம் 1955-ன் பிரிவு 3-ன்படி, பிரதமர் தன்னுடைய குடியுரிமையைப் பதிவு செய்யத் தேவையில்லை என்றால், பிறகு மற்றவர்கள் ஏன் தங்களுடைய குடியுரிமையைப் பதிவு செய்ய வேண்டும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

'சாதாரண மனிதன் இதுபோன்ற பதில்களைக் கூறினால் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமா?' போன்ற கமென்டுகளையும் 'இந்தியர் ஏன் குடியுரிமையை நிரூக்க வேண்டும்?' போன்ற கமென்டுகளையும் பதிவு செய்து பிரதமர் அலுவலகம் அளித்துள்ள பதில் தொடர்பாக விவாதங்களை நடத்தி வருகின்றனர். குடியுரிமைச் சட்டம் தொடர்பாக கடுமையான வன்முறைகள் நடந்துள்ள நிலையில், இந்தப் பதிலை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

More News

சடலங்களைப் பதப்படுத்தும் “பார்மலின்” வேதிப்பொருள் மீன்களுக்கா??? பதற வைக்கும் அதன் விளைவுகள்

காசி மேடு மீன் சந்தையில் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் மீன்களின் தரம் குறைந்து காணப்படுவதாகத் தொடர்ந்து குற்றச் சாட்டுகள் எழுந்த

ஆணவக்கொலைகள் குறித்த திரைப்படத்திற்கு பா.ரஞ்சித் பாராட்டு!

சமீபத்தில் வெளியான ஆணவ கொலைகள் குறித்த திரைப்படம் 'கன்னிமாடம்'. நடிகர் போஸ் வெங்கட் இயக்கிய இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் தற்போது ஓடி வருகிறது.

உயிர் வாழ பரிட்சை முக்கியமா? பிரபல இசையமைப்பாளரின் டுவீட்

பிளஸ் டூ மாணவர்களுக்கு இன்று பொதுத்தேர்வு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை முதல் மாணவர்கள் பரீட்சை எழுதி வருகின்றனர்.

முத்தமிடுவதை நிறுத்துங்கோ... கொரோனா அச்சத்தால் பல நாடுகளில் நடந்த நிகழ்வுகள்

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஒருவருக்கொருவர் கை குலுக்குவது, முத்தமிடுவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என்று பிரான்ஸ அரசு கேட்டுக்

முடிவுக்கு வந்த அருண் விஜய்யின் அடுத்த படம்!

அருண் விஜய் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கிய 'மாபியா' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்த நிலையில் தற்போது அவர் நடித்து நடித்து வந்த இன்னொரு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது