சி.கே.குமரவேல் விலகல்: மக்கள் நீதி கட்சி விளக்கம்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து அக்கட்சியின் பிரமுகர் சி.கே.குமரவேல் விலகியுள்ள நிலையில் இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த விளக்க அறிக்கையில், 'நேர்காணலுக்கு கூட வராமல், தேர்தலில் தான் கடலூர் தொகுதியில் போட்டியிடுவதாக சி.கே.குமரவேல் அறிவித்தது கட்சி கட்டுப்பாடுகளுக்கு முரணான செயல் என்றும், ஜனநாயக முறைப்படி நடைபெற்ற வேட்பாளர் தேர்வு முறைக்கு எதிராக செயல்பட்டதால் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து குமாரவேலிடம் விளக்கம் கேட்கப்பட்டதாகவும், அந்த விளக்கம் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லாததால் சி.கே.குமரவேல் ராஜினாமாவை கட்சி ஏற்றுக்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.