close
Choose your channels

'நாக்கை அறுக்க வேண்டும்' என்று பேசிய அமைச்சர் குறித்து மக்கள் நீதிமன்றம் அறிக்கை!

Tuesday, May 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும், அவர் நாதுராம் கோட்சே என்று சமீபத்தில் கமல் பேசியதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கண்டனம் தெரிவித்ததோடு, கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என்றும் பேசினார்.

அமைச்சரின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து மக்கள் நீதி மய்யம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மாண்புமிகு அமைச்சர் திரு.ராஜேந்திர பாலாஜி அவர்கள் அரசியல் மாண்பும், தனி மனித கண்ணியமும் துளியுமின்றி, சட்ட விரோதமாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் நாக்கை அறுக்க வேண்டும் என்று கூறுவது கடுமையான கண்டனத்துக்குரியது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினராகவும், பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சித்துரை அமைச்சராகவும் இருக்கும் திரு. ராஜேந்திர பாலாஜி அவர்க்ள், தன் பதவி பிரமாணத்தின்போது எடுத்த உறுதிமொழியை மீறும் வகையில் நடந்து கொண்டதற்காக அவர் வகிக்கும் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment