ஓகி புயலால் திசைமாறிய 30 குமரி மீனவர்கள் கரை சேர்ந்த அதிசயம்

  • IndiaGlitz, [Tuesday,December 19 2017]

சமீபத்தில் ஏற்பட்ட ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் காணாமல் போன நிலையில் அவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சிகள் செய்து வருகின்றனர். மேலும் இன்று பாரத பிரதமர் நரேந்திரமோடி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு நிவாரணம் மற்றும் மீட்புப்பணிகள் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டு வருகிறார்

இந்த நிலையில் ஓகி புயலுக்கு முன்னரே கடலுக்கு மீன்பிடிக்க சென்ற கன்னிகுமரியை சேர்ந்த 30 பேர் தற்போது கரை திரும்பியுள்ளனர். மூன்று மோட்டார் படகுகளில் சென்ற இந்த 30 மீனவர்கள் ஓகி புயல் காரணமாக திசை மாறி சென்ற நிலையில் தற்போது பத்திரமாக கரை திரும்பியுள்ளதால் மீனவர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதேபோன்று இன்னும் பல மீனவர்கள் வழிதவறி இருக்கலாம் என்றும் அவர்களை கண்டுபிடித்து கரைக்கு கொண்டு வரும் முயற்சியில் மத்திய மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More News

தத்தெடுத்த கிராமத்திற்கு சென்று பொதுமக்களை உற்சாகப்படுத்திய சச்சின் தெண்டுல்கர்

பாரத பிரதமர் நரேந்திரமோடியின் திட்டங்களில் ஒன்றாகிய எம்.பி.க்கள் கிராமத்தை தத்தெடுக்கும் திட்டத்தின் கீழ், முன்னாள் கிரிக்கெட் வீரரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான சச்சின் டெண்டுல்கர்,

பிட்காயினில் முதலீடு செய்தவர்களுக்கு நோட்டீஸ்: வருமான வரித்துறை அதிரடி

கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதிலும் உள்ள ஊடகங்களில் தலைப்பு செய்தி ஆகிவருவது பிட்காயின். இந்தியாவை பொறுத்தவரையில் பொருளாதார அறிவு பெற்றவர்கள் கூட பிட்காயின் குறித்து தெரியாத நிலை

த்ரிஷா வழங்கும் கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் விருந்து

கோலிவுட் திரையுலகின் முன்னணி நாயகிகளில் ஒருவரான த்ரிஷா, தற்போது இளம் நடிகைகளுக்கு இணையாக பிசியாக ஒரே நேரத்தில் 6 படங்களில் நடித்து வருகிறார். அவற்றில் ஒன்று த்ரில் படமான 'மோகினி

அருவியும் ஆஸ்மாவும் ஒரே கதையா?

கடந்த வாரம் வெளியான 'அருவி' திரைப்படத்தில் எந்த தவறும் கண்டுபிடிக்க முடியாமல் முழுக்க முழுக்க பாசிட்டிவ் விமர்சனங்களை ஊடகங்கள் கொடுத்து கொண்டிருக்கும் நிலையில்

அது முழுக்க முழுக்க என்னோட தவறுதான்: ஆர்.ஜே.பாலாஜி கூறியது எதை தெரியுமா?

காமெடி நடிகர் ஆர்.ஜே. பாலாஜி திரையில் தான் காமெடி நடிகர், ஆனால் நிஜத்தில் ஒரு பொருப்புள்ள சமூகநல சிந்தனையாளர் என்பது பல நேரங்களில் தெரியவந்துள்ளது