அரசியலில் நான் கதிர் ஆனந்த் ஜூனியர்.. தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு..!

  • IndiaGlitz, [Tuesday,March 26 2024]

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து விட்டு பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளனர். அந்த வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சில நாட்களாக சூறாவளி பிரச்சாரம் செய்து வரும் நிலையில் தற்போது அவர் வேலூரில் வேட்பாளர் கதிர் ஆனந்த் அவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.



அந்த பிரச்சாரத்தின் போது ’நான் கதிர் ஆனந்த் அவர்களின் ஜூனியர். பள்ளி கல்லூரிகள் மட்டுமல்ல, அரசியலிலும் நான் அவருக்கு ஜூனியர். எனவே நான் ஒரு அமைச்சராகவோ, எம்எல்ஏ ஆக வோ, இளைஞர் அணி தலைவராகவோ இங்கு வாக்கு கேட்க வரவில்லை. கதிர் ஆனந்தின் நண்பராக வாக்கு கேட்டு வந்துள்ளேன் என்று கூறினார்.



மேலும் கடந்த முறை வேலூர் தொகுதி மக்கள் மிகவும் சோதித்து விட்டீர்கள். மற்ற தொகுதிகளில் எல்லாம் லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கிடைத்த நிலையில் வேலூரில் மட்டும் வெறும் 8000 வாக்குகள் மட்டுமே வித்தியாசம் இருந்தது. ஆனால் இந்த முறை 2 லட்சம் அல்லது 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். கதிர் ஆனந்த் எதிராக நிற்கும் வேட்பாளர்கள் அனைவருக்கும் டெபாசிட் இழக்க வேண்டும், அந்த அளவுக்கு நீங்கள் வாக்குகளை அவருக்கு அளிக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் ஐபிஎல் போட்டியும் அதிமுகவும் ஒன்றுதான். ஐபிஎல் போட்டியில் சென்னை, பெங்களூர், மும்பை, குஜராத், கொல்கத்தா போன்ற அணிகள் இருப்பது போலவே அதிமுகவிலும் ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி, மோடி அணி, சசிகலா அணி, டிடிவி தினகரன் அணி, ஜெ தீபா அணி, தீபாவின் டிரைவர் அணி என பல அணிகள் உள்ளன. எனவே அந்த அணிகளுக்கு வாக்களித்து உங்கள் ஓட்டுக்களை வீணாக்காமல், திமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்’ என்று உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

More News

இதனால் தான் கனியை விட்டு பிரிந்தாரா ? சமீபத்தில் ரசிகனின் ரசிகன் மணி கூறிய பல தகவல்கள்.

வாழ்க்கையில் நான் பட்ட கஷ்டம் தான் என்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்துள்ளது.நான் பட்ட அவமானம் என்னுடைய ரசிகனுக்கு ஏற்படக் கூடாது....

வாழ்க்கையில் ஒருமுறை மட்டும் நடக்கக்கூடியது.. நாளை மறுநாள் ரிலீஸ் படத்திற்கு சூர்யா வாழ்த்து..!

நாளை மறுநாள் ரிலீஸ் ஆக இருக்கும் படத்திற்கு நடிகர் சூர்யா தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் அந்த வாழ்த்து பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கமல்ஹாசனின் 'சத்யா' ரீமேக் ஆகிறதா? நாயகன், இயக்குனர் இவர்களா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், இசை ஞானி இளையராஜா இசையில், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான திரைப்படம் 'சத்யா'.

அடுத்தடுத்து வெளியாகும் 'ரத்னம்' பட அப்டேட்டுகள்.. இன்று என்ன தெரியுமா?

பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் புரட்சித் தளபதி விஷால் நடிப்பில் உருவான 'ரத்னம்' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஒரே தொகுதியில் ஐந்து ஓபிஎஸ் போட்டி.. ஒரிஜினல் ஓபிஎஸ்-க்கு வந்த சோதனை..!

முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பாஜக கூட்டணியில் இணைந்து ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பதும் அவர் சமீபத்தில் தான் வேட்புமனு