close
Choose your channels

17 வயது இளம்பெண் மரணத்தில் துப்பு: ஒரே நேரத்தில் இருவரை காதலித்தது அம்பலம்

Monday, December 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வேலூரை அடுத்த அரியூர்க்குப்பம் என்ற பகுதியைச் சேர்ந்த நிவேதா என்ற 17 வயது இளம்பெண் ஒருவர் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து கொண்டிருந்த நிலையில் திடீரென கல்குவாரி அருகே மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இதுகுறித்து விசாரணை நடந்தபோது நிவேதாவை இருவர் ஒரே நேரத்தில் காதலித்ததாக கூறப்பட்டது. எனவே அவரை காதலித்த இருவரில் ஒருவர்தான் கொலையாளியாக இருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்த விசாரணையில் நிவேதா, தான் வேலை பார்க்கும் மருத்துவமனை கேண்டீனில் உள்ள ஒரு இளைஞரை காதலித்துள்ளார். பின்னர் அந்த இளைஞருக்கு தெரியாமல் பிரகாஷ் என்ற ஆட்டோ டிரைவரையும் காதலித்துள்ளார். இந்த நிலையில் பிரகாஷூக்கு நிவேதா, இன்னொருவரை காதலிப்பது தெரியவந்ததால் அவரை விட்டு விலகியுள்ளார். ஆனால் பிரகாஷ் தன்னை திருமணம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியதால், வீட்டை விட்டு கல்குவாரிக்கு வரும்படி பிரகாஷ் கூறியுள்ளார்.

திருமணம் செய்யத்தான் பிரகாஷ் கூப்பிடுவதாக நினைத்து நிவேதா துணிமணியுடன் வர, நிவேதாவை கல்குவாரியில் இருந்து கீழே தள்ளி பிரகாஷ் கொலை செய்ததாக விசாரணையில் தெரிய வந்தது. இந்த கொலைக்கு பிரகாஷின் நண்பர் நவீனும் உடந்தை என தெரிய வந்ததை அடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். 17 வயதில் ஒரே நேரத்தில் இரண்டு இளைஞர்களை காதலித்ததால் தற்போது பரிதாபமாக உயிரிழந்த நிவேதாவால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment