17 வயது இளம்பெண் மரணத்தில் துப்பு: ஒரே நேரத்தில் இருவரை காதலித்தது அம்பலம்

  • IndiaGlitz, [Monday,December 23 2019]

வேலூரை அடுத்த அரியூர்க்குப்பம் என்ற பகுதியைச் சேர்ந்த நிவேதா என்ற 17 வயது இளம்பெண் ஒருவர் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து கொண்டிருந்த நிலையில் திடீரென கல்குவாரி அருகே மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இதுகுறித்து விசாரணை நடந்தபோது நிவேதாவை இருவர் ஒரே நேரத்தில் காதலித்ததாக கூறப்பட்டது. எனவே அவரை காதலித்த இருவரில் ஒருவர்தான் கொலையாளியாக இருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்த விசாரணையில் நிவேதா, தான் வேலை பார்க்கும் மருத்துவமனை கேண்டீனில் உள்ள ஒரு இளைஞரை காதலித்துள்ளார். பின்னர் அந்த இளைஞருக்கு தெரியாமல் பிரகாஷ் என்ற ஆட்டோ டிரைவரையும் காதலித்துள்ளார். இந்த நிலையில் பிரகாஷூக்கு நிவேதா, இன்னொருவரை காதலிப்பது தெரியவந்ததால் அவரை விட்டு விலகியுள்ளார். ஆனால் பிரகாஷ் தன்னை திருமணம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியதால், வீட்டை விட்டு கல்குவாரிக்கு வரும்படி பிரகாஷ் கூறியுள்ளார்.

திருமணம் செய்யத்தான் பிரகாஷ் கூப்பிடுவதாக நினைத்து நிவேதா துணிமணியுடன் வர, நிவேதாவை கல்குவாரியில் இருந்து கீழே தள்ளி பிரகாஷ் கொலை செய்ததாக விசாரணையில் தெரிய வந்தது. இந்த கொலைக்கு பிரகாஷின் நண்பர் நவீனும் உடந்தை என தெரிய வந்ததை அடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். 17 வயதில் ஒரே நேரத்தில் இரண்டு இளைஞர்களை காதலித்ததால் தற்போது பரிதாபமாக உயிரிழந்த நிவேதாவால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

More News

மனைவியுடன் ஒரு மணி நேரம் போனில் பேசிய கணவன் தூக்கில் தொங்கி தற்கொலை!

அகமதாபாத் சென்ற மனைவியுடன் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் போனில் பேசிய கணவர் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தை

பிகினி உடை, பீச் ஊஞ்சல்:வைரலாகும் காஜல் சகோதரிகளின் புகைப்படம்

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் காஜல்அகர்வால். இவர் அஜித்துடன் 'விவேகம்' விஜய்யுடன் 'ஜில்லா, மெர்சல், சூர்யாவுடன் 'மாற்றான்' மற்றும்

பாடகியாக மாறிய அஜித் மகள்! வைரலாகும் வீடியோ

தல அஜித் மற்றும் அஜித்தின் மனைவி ஷாலினி அஜித் ஆகிய இருவருமே திரைத்துறையை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிந்ததே. அஜித்தின் மனைவி ஷாலினி திருமணத்திற்கு

அரவிந்தசாமியின் அடுத்த பட ரிலீஸ் குறித்த தகவல்!

'துருவங்கள் பதினாறு' என்ற ஒரே படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகையே திரும்ப வைத்தவர் இயக்குனர் கார்த்திக் நரேன். ரகுமான் நடித்த இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பை

டைம் வேஸ்ட், இவர்களையெல்லாம் திருத்தவே முடியாது: பிரபல நடிகர் குறித்து சின்மயி

இது போன்ற நபர்களை திருத்தவே முடியாது, இவர்களை திருத்த முயற்சித்தால் நமக்கு தான் டைம் வேஸ்ட், எனவே அவர்களை அப்படியே விட்டுவிட வேண்டும் என பிரபல நடிகர் குறித்து பாடகி சின்மயி