அரசியலில் கமல் இன்னும் எல்.கே.ஜியில் கூட சேரவில்லை: தமிழக அமைச்சர்

உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி ஒரு நாடாளுமன்ற தேர்தலையும் சந்தித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த தேர்தலில் அவரது கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்றாலும் சென்னை உள்பட ஒருசில முக்கிய தொகுதிகளில் கௌரவமான வாக்குகளை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது இந்த இரண்டு ஆண்டுகளில் அவர் கட்சியை நல்ல முறையில் வளர்த்து வருகிறார் என்பதும் வரும் சட்டமன்ற தேர்தலில் அவர் நிச்சயம் போட்டியிட்டு மக்களின் நன்மதிப்பை பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கமலஹாசன் குறித்தும் அவரது அரசியல் குறித்தும் தமிழக அமைச்சர்கள் அவ்வப்போது கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதும் அதற்கு கமலஹாசனும் பதிலடி கொடுத்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் ’நடிப்பில் கமல்ஹாசன் திரையுலக சக்கரவர்த்தி தான். ஆனால் அதே நேரத்தில் அரசியலில் இன்னும் அவர் எல்கேஜியில் கூட சேரவில்லை என்று தெரிவித்துள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜுவின் இந்த கருத்துக்கு கமல்ஹாசன் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

எச்சிலை வைத்து கொரோனா பரிசோதனை!!! அதிரடி காட்டும் புதிய திட்டம்!!!

அமெரிக்காவில் எச்சிலை வைத்து கொரோனா பரிசோதனை செய்யும் எளிய வழிமுறை அடுத்த வாரத்தில் இருந்து அனைத்து மாகாணங்களிலும் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

உலக மக்களோடு சேர்ந்து நாங்களும் பிரார்த்தனை செய்கிறோம்: பிரபல இசையமைப்பாளர்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கோடி கோடி மக்களை மகிழ்வித்த எஸ்பிபி சிக்கிரம் குணமாக வேண்டும்: ரஜினிகாந்த்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

14 வருடங்களுக்கு முன் உதவி இயக்குனராக பணிபுரிந்த பிரபல காமெடி நடிகர்: வைரலாகும் புகைப்படம்

14 வருடங்களுக்கு முன் தான் உதவி இயக்குனராக பணிபுரிந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை பிரபல காமெடி நடிகர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

தல தோனி 7.29க்கு ஓய்வை அறிவிக்க இதுதான் காரணமா? பரபரப்பு தகவல்

கடந்த 15ஆம் தேதி இந்திய நாடே சுதந்திர தின விழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்த போது சரியாக இரவு 7.29 மணிக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஓய்வு முடிவை தல தோனி அறிவித்தார்