மதுசூதனன் முன்னாள் முதலமைச்சரா? செல்லூர் ராஜூவின் அடுத்த உளறல்

  • IndiaGlitz, [Saturday,November 04 2017]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக அமைச்சர்கள் அவ்வபோது கொடுக்கும் பேட்டியிலும், பொதுக்கூட்டங்களில் பேசிவரும் பேச்சுகளிலும் உளறல்கள் இருப்பதை அவ்வபோது பொதுமக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கின்றனர்.

தெர்மோகோல் போட்டு அணையை மூடுவது, ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதாக பொய் கூறியதாக கூறியது உள்பட பல விஷயங்கள் பொதுமக்கள் மத்தியில் காமெடியாக இருந்து வரும் நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுக அவைத்தலைவர் மதுசூதனை முன்னாள் முதலமைச்சர் என்று கூறியுள்ளார்.

மதுசூதனன் எப்போது முதலமைச்சராக இருந்தார் என்று அவரது பேச்சை கேட்டு அனைவரும் குழப்பத்தில் உள்ளனர். இதுபோன்ற காமெடி அமைச்சர்கள் இனியும் தேவையா? என்பதை பொதுமக்கள் வரும் தேர்தலில் முடிவு செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.