ஆட்சியை பிடிக்க முடியாது, ஆச்சியை வேண்டுமானால் பிடிக்கலாம்: ரஜினி குறித்து அமைச்சரின் சர்ச்சை பேட்டி

  • IndiaGlitz, [Friday,May 11 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நினைத்திருந்தால் சமீபத்தில் நடந்த 'காலா' இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் எந்த மேடையில் எதை பேச வேண்டும் என்பதை புரிந்து அவர் அந்த விழாவில் அரசியல் பேசுவதை தவிர்த்தார்.

இந்த நிலையில் ரஜினியை தினந்தோறும் விமர்சனம் செய்து தலைப்பு செய்திகளில் இடம்பெற வேண்டும் என்று பலர் குறிக்கோளுடன் செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் அமைச்சர் ஜெயகுமாரை அடுத்து தற்போது அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் ரஜினி குறித்து பேசிய சர்ச்சைக்குரிய பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, ரஜினி தமிழக ஆட்சியை பிடிக்க முடியாது, காரைக்குடி ஆச்சியை வேண்டுமானால் பிடிக்கலாம்' என்று கூறினார். அமைச்சரின் இந்த பேச்சுக்கு காரைக்குடியை சேர்ந்தவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்

ஆச்சி என்பது காரைக்குடி பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் மணமான பெண்களை குறிக்கின்ற மரியாதைக்குரிய சொல் ஆகும். அவர்களை யார் மேண்டுமானாலும் பிடிக்கலாம் என்று அமைச்சர் கூறியுள்ளது நாராசமான வார்த்தைகள் என்றும் இந்த வார்த்தைகளை கேட்கும்போது தங்கள் நெஞ்சம் கொதிப்பபதாகவும் இதற்காக அமைச்சர் செல்லூர் ராஜு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

More News

'பாசமலர்' காட்சிகள் ஏன் இல்லை? 'நடிகையர் திலகம் இயக்குனர் விளக்கம்

நடிகை சாவித்திரி என்றாலே அனைவருக்கும் உடனே ஞாபகம் வருவது பாசமலர் படம்தான். சிவாஜி கணேசனும் சாவித்திரியும் அந்த படத்தில் போட்டு போட்டு நடித்திருப்பார்கள்.

பிரபல நடிகையின் நிர்வாண படத்தை ஆன்லைனில் லீக் செய்த சென்னை இயக்குனர்

சென்னையை சேர்ந்த இயக்குனர் ஒருவர்  பிரபல இந்தி நடிகை மற்றும் மாடலுமான அவந்திகாவின் நிர்வாண படத்தை விலைக்கு வாங்கி ஆன்லைனில் பதிவு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விஷால் ரசிகர்களுக்கு இன்று இரட்டை மகிழ்ச்சி

விஷால் நடித்த 'இரும்புத்திரை' திரைப்படம் இன்று தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது. கடந்த புதன் அன்று பாதி திரைப்படம் பத்திரிகையாளர்களுக்காக திரையிடப்பட்டு

இந்தியாவின் மிகவும் விரும்பத்தக்க பெண்கள் பட்டியலில் பிக்பாஸ் நடிகை

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்துக்கு சென்றவர் நடிகை ஓவியா என்பது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளரான ஆரவ்வை விட

விஜய்யை அடுத்து சூர்யாவுடன் இணையும் சூப்பர் ஸ்டார்

சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'NGK' என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை அடுத்து அவர் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே