நடிகர் வடிவேலுவுக்கு ஒமிக்ரான் தொற்றா? அமைச்சரின் அதிர்ச்சி தகவல்!

  • IndiaGlitz, [Monday,December 27 2021]

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அவருக்கும் ஒமிக்ரான் பரவி இருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் வடிவேலு, இயக்குனர் சுராஜ் உள்பட ஒருசிலர் சமீபத்தில் ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற திரைப்படத்தின் பணிகளுக்காக லண்டன் சென்றார்கள் என்பதும் அங்கிருந்து திரும்பிய வடிவேலுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் வடிவேலுவை அடுத்து இயக்குனர் சுராஜ் அவர்களுக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளது. இந்த நிலையில் நடிகர் வடிவேலுவின் உடல்நிலை சீராக இருப்பதாக சமீபத்தில் தெரிவித்திருந்த சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் வடிவேலுவுக்கும் இயக்குனர் சுராஜ்க்கும் ஒமிக்ரான் வைரஸ் பரவி இருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் வடிவேலுவின் பரிசோதனை முடிவுகள் வெளிவந்த பிறகே அவருக்கு ஒமிக்ரான் தொற்று பரவி இருக்கிறதா என்பது உறுதி செய்யப்படும் என்பது குறிபிடத்தக்கது.

More News

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேரடியாக ஃபினாலேவுக்கு செல்லும் போட்டியாளர் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 84 நாட்களாக நடைபெற்ற நிலையில் இன்று 85வது நாள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஓரிரு வாரங்கள் மட்டுமே இருக்கும்

பிரபல பின்னணி பாடகர்-நடிகர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

பிரபல பின்னணி பாடகர் மற்றும் நடிகர் மாணிக்க விநாயகம் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 78

'ராதே ஷ்யாம்' படத்தின் தமிழ் பின்னணி இசையமைப்பாளர் அறிவிப்பு!

பிரபல நடிகர் பிரபாஸ் நடித்து வரும் 'ராதே ஷ்யாம்' என்ற படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்தது என்பதும் இந்த படம் ஜனவரி 14ஆம் தேதி உலகம்

அனுஷ்காவின் அடுத்த படம் அறிவிப்பு: ஹீரோ இவர்தான்!

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அனுஷ்கா ஷெட்டி நடிக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி உள்ளது. 

'மாஸ்டர்' மாளவிகா மோகனனுக்கு திருமணம் ஆகிவிட்டதா? குழப்பத்தை ஏற்படுத்திய போட்டோஷூட்

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தில் நாயகியாக நடித்த மாளவிகா மோகனனுக்கு திருமணம் ஆகி விட்டதா என்ற சந்தேகத்தை அவர் வெளியிட்டுள்ள போட்டோ ஷூட் ஒன்று கிளம்பியுள்ளது