எஸ்.வி.சேகரும், எச்.ராஜாவும் சைக்கோக்கள்: அமைச்சர் ஜெயகுமார் விளாசல்

  • IndiaGlitz, [Friday,April 20 2018]

சமீபத்தில் தமிழக கவர்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது பெண் நிருபர் ஒருவரின் கன்னத்தை தட்டியது பெரும் சர்ச்சைக்குள்ளானது. ஆனால் இதற்கு கவர்னர் அந்த பெண் நிருபரிடம் மன்னிப்பு கேட்டதும், கவர்னரின் மன்னிப்பை அந்த பெண் நிருபர் ஏற்றுக்கொண்டதுடன் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது. ஆனால் முடிந்து போன இந்த பிரச்சனை குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து விட்டு பின்னர் கிளம்பிய பயங்கர எதிர்ப்பால் அந்த கருத்தை டெலிட் செய்துவிட்டு மன்னிப்பும் கேட்டார் நடிகர் எஸ்.வி.சேகர்.

அதேபோல் கருணாநிதி, கனிமொழி குறித்து தனது டுவிட்டரில் சர்ச்சை கருத்தை தெரிவித்துவிட்டு ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்ப்புகளை சம்பாதித்து கொண்டார் சர்ச்சை நாயகன் எச்.ராஜா

இந்த நிலையில் இவர்கள் இருவர் குறித்து அமைச்சர் ஜெயகுமார் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, 'எஸ்வி சேகர் மீது புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவதூறு கருத்து தெரிவித்தவர்கள் மீது பத்திரிகையாளர்கள் புகார் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அதேபோல் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து வரும் எச்.ராஜா மீது புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

எஸ்.வி. சேகர், எச். ராஜா ஆகிய இருவரும் இழிவாக பேசுவதை ஏற்க முடியாது. என்றும், இந்த இரண்டு சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து என்று கூறிய ஜெயகுமார், இவர்கள் மீது யாரும் புகார் கொடுக்கவில்லை என்றால் அரசே இவர்கள் மீது புகார் அளித்து நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினார். 

More News

படிக்காமல் பதிவு செய்துவிட்டேன்: பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.வி.சேகர்

நகைச்சுவை நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் நேற்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசும் விதத்தில் சர்ச்சை கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார்.

ஜோதிகா படத்தில் அறிமுகமாகும் ஏ.ஆர்.ரஹ்மானின் உறவினர்

பிரபல இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகவுள்ள 'துமாரி சூளு' என்ற படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் நடிகை ஜோதிகா நடிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். 

திரையுலகில் 40 ஆண்டுகள்: விஜயகாந்துகு கமல், ரஜினி, சூர்யா பாராட்டு

தமிழ் திரையுலகில் கேப்டன் விஜயகாந்த் 40 ஆண்டுகள் சேவை செய்துள்ளதை அடுத்து அவருக்கு சமீபத்தில் பிரமாண்டமான விழா ஒன்று சென்னையில் நடைபெற்றது.

தளபதி 62' படத்தில் இணைந்த முன்னாள் ஹீரோ

விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'தளபதி 62' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கோலிவுட் திரையுலகின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதால் இம்மாதம் 25ஆம் முதல் தொடங்கவுள்ளது.

பெயரை மாற்றிய குஷ்பு! புதிய பெயர் என்ன தெரியுமா?

நடிகை, தயாரிப்பாளராக மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளராகவும் இருந்து வருகிறார் குஷ்பு. மேலும் அவர் தனது சமூக வலைத்தளங்கள் மூலம் ஆக்கபூர்வமாக குரல் கொடுத்து வருகிறார்.