மாடி மேல் இருக்கும் கமலுக்கு மக்கள் கஷ்டம் புரியாது: அமைச்சர் ஜெயகுமார்

  • IndiaGlitz, [Saturday,January 06 2018]

கடந்த மூன்று நாட்களாக போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்தம் காரணமாக பொதுமக்கள் பெரும் அவதியில் உள்ளனர். இதுகுறித்து நேற்று டுவிட்டரில் கருத்து தெரிவித்த கமல், 'தமிழக முதலமைச்சர், மக்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளையும் மனதில் கொண்டு, தயவாய் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்றும், பொங்கலுக்கு அதுவே அரசு தரும் விலைமதிப்பிலா பரிசாகும்' என்றும் குறிப்பிட்டிருந்தார்

கமல்ஹாசனின் இந்த கருத்து குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த தமிழக அமைச்சர் ஜெயகுமார், 'மாடி மேல் இருந்து பார்க்கும் கமல் போன்றவர்களால் மக்கள் கஷ்டத்தை அறிய இயலாது, குடிசைகளில் இருந்து மக்களை சந்திப்பவர்கள் நாங்கள் என்றும், அதிமுக அரசு மீது கமல் பொத்தாம் பொதுவாக குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் ஆர்.கே.நகரில் தினகரன் பெற்ற வெற்றி குறித்து கருத்து கூறிய அமைச்சர் ஜெயகுமார், 'ஆர்.கே.நகரில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் மூலம் வாக்குகளை கொள்ளையடித்து விட்டனர் என்று தெரிவித்தார்