காலா போன்ற காளான்கள் காணாமல் போகும்: அமைச்சர் ஜெயகுமார்

  • IndiaGlitz, [Wednesday,May 09 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை திரையுலகை சேர்ந்த சிலரும், அரசியல்வாதிகளும் கடந்த சில மாதங்களாக கடுமையாக விமர்சனம் செய்து வருவது தெரிந்ததே. குறிப்பாக தமிழக அமைச்சர் ஜெயகுமார் அவ்வப்போது ரஜினியை விமர்சனம் செய்ய தவறுவதில்லை

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார் இன்று வெளியாகியுள்ள ரஜினியின் 'காலா' படத்தின் பாடல்கள் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், 'காலா போன்ற காளான்கள் காணாமல் போகும் என்றும் திரைப்படம் மூலம் மக்களை தூண்டிவிட நினைத்தால் அரசு ஏற்றுக்கொள்ளாது என்றும் கூறினார். மேலும்  காலா படத்தின் பாடல்கள் அமைதியை சீர்குலைக்கும் வகையில் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசியல் சுயலாபத்திற்காக குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கக்கூடாது என்றும் அமைச்சர் தெரிவித்தார். 

மேலும் * எம்ஜிஆர் தனது திரைப்படங்களில் மது, புகை பிடித்தது கிடையாது  என்றும் அவரை போல் மற்ற நடிகர் இருக்க முடியாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். அமைச்சரின் இந்த கருத்துக்கு இன்று நடைபெறும் 'காலா' இசைவெளியீட்டு விழாவில் ரஜினி பதிலளிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

'இரும்புத்திரை'யில் ஆதார் ஆபத்து குறித்த காட்சிகளா? இயக்குனர் மித்ரன் விளக்கம்

பி.எஸ்.மித்ரன் இயக்கிய 'இரும்புத்திரை' திரைப்படம் வரும் வெள்ளி அன்று வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் முதல் பாதி மட்டும் இன்று பத்திரிகையாளர்களுக்காக திரையிடப்பட்டது.

ரஜினியிடம் ஆயிரம் குறைகள் இருக்கலாம், ஆனால் உண்மை இருக்கு: வைகோ

ரஜினிகாந்த் வெகுவிரைவில் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியல் களத்தில் குதிக்கவுள்ளார். அவருடைய அரசியல் அறிவிப்பு இன்று நடைபெறும் 'காலா' இசை வெளியீட்டு விழாவில் கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

விசுவாசம்' படத்தில் பிரபல காமெடி நடிகர்: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பில் அஜித், நயன்தாரா உள்பட அனைவரும் கலந்து கொண்டு விறுவிறுப்பாக படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்

இரும்புத்திரை' தடை வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

விஷால், சமந்தா நடிப்பில் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கிய 'இரும்புத்திரை' திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ள நிலையில்

ஒரு விஜய் ரசிகையின் நெகிழ்ச்சியான பதிவு

தளபதி விஜய் சமீபத்தில் சென்னையில் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.