இசைஞானியை சந்தித்த தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ்.. மறைவுக்கு முன் பவதாரிணி செய்த சேவை..

  • IndiaGlitz, [Thursday,May 16 2024]

இசைஞானி இளையராஜாவை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் இன்று சந்தித்துள்ள நிலையில் இந்த சந்திப்பு குறித்த புகைப்படம் அமைச்சரின் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சந்திப்பு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருப்பதாவது:

தமிழர்களின் பெருமை அய்யா இசைஞானி இளையராஜா அவர்களை அன்பின் நிமித்தமாக சந்தித்தோம்.பெண் கல்வியையும், பெண் உரிமையையும் வலியுறுத்தும் விதமாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையால் ‘பெண்-கல்வி, உரிமைகள், விடுதலை’ எனும் தலைப்பில் விழிப்புணர்வு பாடல் தயாரிக்கப்பட்டது.

அப்பாடல் உருவாக்கத்தில் சகோதரி பவதாரிணி அவர்களின் இசை பங்களிப்புக் குறித்து நன்றியோடு எடுத்துரைத்தோம். அன்போடு வரவேற்று இசையோடு எங்களை வழியனுப்பி வைத்தார். இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பகிர்ந்துள்ளார்.

மேலும் இந்த பதிவில் மறைந்த பவதாரிணியின் இசையில் உருவான ’பெண் கல்வி உரிமைகள் விடுதலை’ என்ற பாடலையும் அமைச்சர் அன்பில் மகேஷ் பதிவு செய்துள்ளார். பவதாரிணி இசையில், சுகிர்தாரணி பாடல் வரிகளில் உருவான இந்த பாடலை தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

35 நாட்களில் முடித்துவிட்டேன்.. சந்தோஷமான செய்தி சொன்ன இளையராஜா..!

சைஞானி இளையராஜா இன்று மாலை 6:00 மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் சற்றுமுன் அவர் அந்த முக்கிய அறிவிப்பு என்ன

மீண்டும் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஜிவி பிரகாஷ் - சைந்தவி.. என்ன சொல்கிறார்கள்?

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் அவரது மனைவி சைந்தவி ஆகிய இருவரும் பரஸ்பரம் பிரிவதாக தங்களது சமூக வலைதளங்களில்

'த்ரிஷ்யம்' இயக்குனரின் அடுத்த படத்தில் அமலாபால்.. 4 மொழிகளில் ரிலீஸ்..!

மோகன்லால், மீனா நடித்த 'த்ரிஷ்யம்' படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் வெளியிடும் படத்தில் அமலாபால் நாயகியாக நடித்துள்ள நிலையில் இந்த படம் விரைவில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா ராய்க்கு என்ன ஆச்சு? கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்பு..!

நடிகை ஐஸ்வர்யா ராய் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஒவ்வொரு ஆண்டும் சென்று வருகிறார் என்பது பலர் அறிந்தது. அந்த வகையில் இந்த ஆண்டும்

சீரியலில் மாமியார் - மருமகள்.. நிஜத்திலும் மாமியார் - மருமகள் ஆகும் ஆச்சரியம்..!

சீரியலில் மாமியார் மருமகள் கேரக்டரில் நடித்து கொண்டிருக்கும் இரண்டு நடிகைகள் நிஜமாகவே மாமியார் மருமகள் ஆகப்போகும் ஆச்சரியம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.