இரண்டாக மடித்து வைக்கும் முதல் ஸ்மார்ட்போன்- மைக்ரோசாப்ட்டின் புது அறிமுகம்!!!

  • IndiaGlitz, [Thursday,August 13 2020]

முதல்முறையாக மடித்து வைக்கும் ஸ்மாட்போனை தயாரிக்க இருக்கிறோம் என மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதன் வெளியீட்டு தேதியை அந்நிறுவனம் இன்று வெளியிட்டு இருக்கிறது. வருகிற செப்டம்பர் 10 ஆம் தேதி மைக்ரோசாப்ட் நிறுவனம் இரண்டாக மடித்து வைக்கும் முறையிலான ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. அதன் பெயர் சாபேஸ் டூயோ எனவும் தெரியவந்துள்ளது. இதில் இரண்டு ஸ்கிரீன் வைக்கப்பட்டு இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறப்பம்சங்கள் - இரண்டு 5.6 இன்ச் OLED 1350×1800 பிக்சல் டிஸ்ப்ளே மற்றும் ஆக்டோகோர் குவால்காம் ஸ்னாப் டிராகன் 855 பிராசஸர், 6 ஜிபி ரேம் இதில் அடங்கும். அதைத்தவிர இதன் மெமரி 256 ஜிபி என்பதும் ஆச்சர்யத்தை வரவழைக்கிறது. இதன் பிரைமரி மெமரி 11 எம்.பி யாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. 3,577 எம்ஏஹெச் பேட்டரி கொண்டதாக இந்த செல்போன் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 4 ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் வசதி யுஎஸ்பி வசதியும் அடங்கும். டைப் சி ஜார்ஜர், பிரத்யேகமான ஸ்டைல் போன்றவையும் இந்த செல்போனின் சிறப்பம்சங்களாக கூறப்பட்டுள்ளது. இதன் விலை 1,399 டாலர் என மைக்ரோசாப்ட் நிறுவனம் என நிர்ணயித்து இருக்கிறது. இது இந்திய மதிப்பில் ரூ.1,04,600 என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் முதல் விற்பனை வருகிற செப்டம்பர் 10 ஆம் தேதி அமெரிக்காவில் துவங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

More News

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பிரபல தமிழ் நடிகை: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர்

ரயில் தண்டவாளத்தில் வீல்சேருடன் சிக்கிகொண்ட 66 வயது முதியவர்: அதிர்ச்சி வீடியோ 

அமெரிக்காவில் வீல் சேரில் சென்று கொண்டிருந்த ஒருவர் ரயில் தண்டவாளத்தில் சிக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

2 மாத குழந்தையை 45 ஆயிரத்துக்கு விற்ற தாய்: கொரோனா ஊரடங்கால் வறுமை?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வேலை இன்றி வருமானம் இன்றி கோடிக்கணக்கானோர் தவித்து வருகின்றனர்.

பிடிஐ செய்தி நிறுவனத்தின் மேனேஜர் தற்கொலை: வேலைச்சுமை அதிகமா?

பிடிஐ செய்தி நிறுவனத்தின் மேனேஜர் பிவி ராமானுஜம் என்பவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கிணற்றில் விழுந்த குண்டு மனிதர்: தொப்பையால் உயிர் தப்பித்த அதிசயம்

கிணற்றில் தவறி விழுந்த குண்டு மனிதர் ஒருவர் தொப்பையால் உயிர் தப்பிய அதிசயம் சீனாவில் நடந்துள்ளது