மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 7 மென்பொருளை முடக்கப்போவதாக அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,January 04 2020]

 

கணினிக்கான மென்பொருள் தயாரிப்பில் முன்னிலையில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மென்பொருள்களே பெரும்பாலான கணினிகளில் பொருத்தப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிறுவனம் மென்பொருட்களைத் தொடர்ந்து புதுப்பிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவத்தின் விண்டோஸ் 7 மென்பொருளின் விற்பனை வரும் 14 ஆம் தேதிக்குப்பின்னர் நிறுத்தப்படும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவம் விண்டோஸ் 10 மென்பொருளை அறிமுகம் செய்தது. இம்மென்பொருள் பயன்படுத்துவதற்கு எளிதாக இல்லை எனப் பல வாடிக்கையாளர்கள் விண்டோஸ் 7 ஐ தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர். தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 10 ஐ பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் விதமாக ஜனவரி 14, 2020 முதல் விண்டோஸ் 7 மென்பொருள் விற்பனையை நிறுத்திக்கொள்வதாக, அதிகாரப் பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

 

பயனாளர்கள் தற்போது செய்ய வேண்டியது

விண்டோஸ் 7 ஐ பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் விண்டோஸ் 10 ஐ இணையத்தில் இருந்து இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. விற்பனை நிறுத்தப்படுவதால் ஜனவரி 14 க்குப் பின்பு விண்டோஸ் 7 முழுவதுமாகச் செயல்படாது எனப் பொருள் கொள்ளக்கூடாது. ஜனவரி 14 க்குப் பின்பும் விண்டோஸ் 7 தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும். ஆனால் விண்டோஸ் 7 க்கான அதிகாரப்பூர்வமான ஆதரவை மைக்ரோசாப்ட் நிறுத்திக்கொள்ளும் என்பதால் மென்பொருள் செயல்படுவதற்கான மேம்பாட்டு வசதிகளோ, வைரஸை தடுப்பதற்கான வசதிகளோ இருக்காது. குறிப்பாக மென்பொருளில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான வாய்ப்புகள் இருக்காது. எனவேதான் மைக்ரோசாப்ட் நிறுவனம் மென்பொருள் நிறுத்தப்படுவதற்கு முன்பே இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இத்தகைய பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கு வாடிக்கையாளர்கள் விண்டோஸ் 7 க்கு அடுத்த புதுப்பிப்பான விண்டோஸ் 10 க்கு மாறிவிடுவது சிறந்த வழி என மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது

More News

போதை ஆசாமியிடம் சிக்கிய கருநாகம்: கொத்தி, கொத்தி உயிரிழந்த பரிதாபம்

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்று கூறுவார்கள். ஆனால் போதை ஆசாமியிடம் சிக்கிய ஒரு பாம்பு அந்த நபரை கொத்தி, கொத்தி, கடைசியில் சோர்ந்துபோய் உயிரைவிட்ட சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது

பெயரை மாற்றியது ஏன்? மனம் திறந்த நயன்தாரா பட நாயகன்!

நயன்தாரா நடித்த 'மாயா' என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்த நடிகர் ஆரி சமீபத்தில் தனது பெயரை ஆரி அருஜூனா என்று மாற்றினார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

பழம்பெரும் நடிகரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் பிரபல நடிகை!

பழம்பெரும் நடிகர் ஒருவரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை அவரது மகளே தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது 

11ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த காதலன் கைது! திருச்சியில் பயங்கரம்

11ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த பள்ளி மாணவி ஒருவரை அவரது காதலரே பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

மனைவியின் கள்ளக்காதலனை வீட்டுக்கு வரவழைத்த கணவன்: அதன்பின் நடந்த விபரீதம்

சென்னை அனகாபுத்தூர் பகுதியை பகுதியில் மனைவியின் கள்ளக்காதலனை தந்திரமாக வீட்டுக்கு வரவழைத்து கணவன், மனைவியின் கள்ளக்காதலனை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது