உயிரைக் காப்பாற்ற பெரும் முயற்சி எடுத்த எம்.ஜி.ஆர், சிங்கப்பூரிலிருந்து வந்த மருந்து....

  • IndiaGlitz, [Tuesday,August 27 2024]

மறைந்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜன் குறித்து அவரது மனைவி திருமதி முத்துலட்சுமி Indiaglitz க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது;

அவர் எப்போதும் சூடான உணவுகளை விரும்புவதில்லை. பெரும்பாலும், குளிர்ச்சியான உணவையே எடுத்துக்கொள்வார். அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம்.

வயிற்றில் புண் இருந்தது. அதன்பிறகே தெரியவந்தது அவருக்கு மூலம் இருந்ததும். தொடர்ந்து மருத்துவமனையில் அவர் சிகிச்சையில் இருந்தார்.

அப்போது பத்திரிகைகள் எல்லாம் அவர் குடித்து குடித்து உடலை கெடுத்துக்கொண்டார் என்று தவறான செய்திகளை வெளியிட்டது. நான் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை.

அந்த சமயத்தில்தான் அவருக்கு ஒரு மருந்து தேவைப்பட்டது . அது இந்தியாவில் இல்லை, அதனை அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் ஆணைப்படி சிங்கப்பூரிலிருந்து கொண்டு வரப்பட்டது. அந்த மருந்து கொடுக்கும்போதே அவர் உயிர் பிரிந்துவிட்டது.

சில நாட்கள் கழித்து, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், மஞ்சள் காமாலையில்தான் நடிகர் சுருளிராஜன் காலமானார் என்ற தகவலைச் சொன்னார். சிலருக்கு அந்த நோய் இருப்பதே தெரியாமல்
இருந்துவிடுவார்கள், என்றும் அவர் சொன்னார். அதன்பின்தான் எனக்கு புரிந்தது,அவர் மஞ்சள் காமாலை நோயினால்தான் இறந்தார் என்பது. ஏனெனில் அந்த கால கட்டத்தில் எனக்கு பெரிதாக எதுவும் புரியவில்லை.

என் கணவர் குடிப் பழக்கத்தால் இறந்தார் என்று இப்போது பேசுவது தேவையில்லாதது.

அவர் இறந்தது சுமார் 15 ஆண்டு கழித்து சோமநாதன் என்ற சினிமா பட தயாரிப்பாளர் வந்து உங்கள் கணவருக்கு நான் சம்பளம் தர வேண்டியுளளது என்று சொல்லி 2500 ரூபாயை தந்து சென்றார். செத்தும் கொடுத்தான் சீதக்காதி.

இந்த கால நகைச்சுவையில் எனக்கு வடிவேலுவை மிகவும் பிடிக்கும். நினைத்தவுடன் சிரிப்பு வரும் என மறைந்த நடிகர் சுருளிராஜன் மனைவி தன் நினைவலைகளை Indiaglitz நேயர்களோடு பகிர்ந்துகொண்டுள்ளார்.

More News

டெங்குவில் இருந்து மீண்ட சீரியல் நடிகை.. உடனே ஒரு ஆன்மீக பயணம்..!

கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த 'மகாநதி' தொடரில் நடித்த நடிகை திவ்யா தற்போது உடல்நிலை சீரானதை அடுத்து ஆன்மீக பயணத்தை தொடங்கியுள்ளார்.

'சுந்தரி 2' தொடரில் இணைந்த 'வானத்தை போல' பிரபலங்கள்.. என்ன கேரக்டர்கள் தெரியுமா?

சன் டிவியில் ஒளிபரப்பான 'வானத்தைப்போல' சீரியல் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த சீரியலில் நடித்த இரண்டு முக்கிய கேரக்டர்கள் தற்போது 'சுந்தரி 2'  சீரியலில் இணைந்துள்ளதாக

நடிகை எமி ஜாக்சன் திருமணம்.. இத்தாலிக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த தமிழ் இயக்குனர்.!

நடிகை எமி ஜாக்சன் இரண்டாவது திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில் இந்த திருமணத்திற்கு இத்தாலிக்கே நேரில் சென்று தமிழ் இயக்குனர் ஒருவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காமெடி நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் காமெடி கேரக்டர்களில் நடித்தவரும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கலந்து கொண்டவருமான பிஜிலி ரமேஷ் சற்றுமுன் காலமானதாக வெளியாகியிருக்கும்

வாயே திறக்காத எம்.எஸ்.வி., வார்த்தைகளை விடும் ராஜா, ஆம் ராஜாவின் இசையில்தான் உயிர் வாழ்கிறோம், கங்கை அமரனின் கல கல... பேட்டி

இந்திய இசை உலகின் அரசனாக கொண்டாடப்படும் இளையராஜாவின் தம்பி கங்கை அமரன். கங்கை அமரன் தமிழ்த் திரைப்பட உலகில் ஓர் இசை அமைப்பாளராகவும், பாடலாசிரியராகவும், திரைக்கதை ஆசிரியராகவும்,