பிரச்சனையை சமாளிக்க 'மெர்சல்' குழுவின் கடைசிகட்ட அதிரடி நடவடிக்கை

  • IndiaGlitz, [Sunday,October 15 2017]

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவரவுள்ளது. தமிழகத்தில் ஒருசில திரையரங்குகளில் முன்பதிவும் தொடங்கிவிட்டது. நாளை முதல் அனைத்து திரையரங்குகளிலும் முன்பதிவு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விலங்குகள் நல வாரியம் அளிக்காத தடையில்லா சான்றிதழ் காரணமாக 'மெர்சல்' திரைப்படத்தின் சென்சார் சான்றிதழ் இன்னும் தயாரிப்பாளரிடம் கிடைக்கவில்லை என்றும் இதன் காரணமாக 'மெர்சல்' படத்தின் ரிலீசுக்கான தடை இன்னும் முழுமையாக நீங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தடையில்லா சான்றிதழ் தேவைப்படும் விலங்குகள் உள்ள ஒருசில காட்சிகள் படத்தில் இருந்து நீக்கவும், விலங்குகள் நல வாரியத்திடம் இருந்து சான்றிதழ் பெற்ற பின்னர் அந்த காட்சிகளை சேர்க்கவும் படக்குழுவினர் கடைசிகட்ட முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே வரும் தீபாவளி தினத்தில் 'மெர்சல் ரிலீஸ் ஆவதில் எந்தவித சிக்கலும் இருக்காது என்ற படக்குழுவினர் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

More News

சந்தானம் படத்தில் கூடுதலாக 2 ஆக்சன் காட்சிகள் ஏன்: இயக்குனர் எம்.ராஜேஷ்

காமெடி நடிகரில் இருந்து ஆக்சன் ஹீரோவாக மாறியுள்ள சந்தானம் சமீபத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் மற்றும் வழக்கறிஞர் ஒருவருடன் ரியல் ஆக்ச்னிலும் ஈடுபட்டார்.

சிவகார்த்திகேயனின் புதிய முடிவால் ரசிகர்கள் உற்சாகம்

தமிழ் திரையுலகில் முன்னணி இடத்தை பிடித்துவிட்ட நடிகர் சிவகார்த்திகேயனின் திரைப்படங்கள் அஜித், விஜய்யை அடுத்து மிகப்பெரிய ஓப்பனிங் வசூலை கொடுத்து வருகின்றன.

விஜய்க்கு 'தமிழாலே ஒன்றானோம்', ஜி.வி.பிரகாஷுக்கு 'தமிழானோம்'

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் 'தமிழாலே ஒன்றானோம்' என்ற பாடலை அனைவரும் கேட்டிருப்போம். ஆனால் தமிழுக்காக 'தமிழானோம்' என்று தொடங்கும் பாடலை ஜி.வி.பிரகாஷ் இயற்றி வருகிறார்.

ஆக்சன் ஹீரோ என்பதை சந்தானம் நிரூபித்துவிட்டார். ஆர்யா

சந்தானம் ஹீரோவாக நடித்த 'சக்க போடு போடு ராஜா' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சந்தானம், இசையமைப்பாளர் சிம்பு உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

பிக்பாஸ் ஜூலிக்கு இயக்குனர் சமுத்திரக்கனியின் முக்கிய அறிவுரை

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து ஆரவ், இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஒருசிலர் உச்சகட்ட புகழையும், ஒருசிலர் இருக்கும் புகழை இழந்தும் உள்ளனர்.