பிரச்சனையை சமாளிக்க 'மெர்சல்' குழுவின் கடைசிகட்ட அதிரடி நடவடிக்கை

  • IndiaGlitz, [Sunday,October 15 2017]

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவரவுள்ளது. தமிழகத்தில் ஒருசில திரையரங்குகளில் முன்பதிவும் தொடங்கிவிட்டது. நாளை முதல் அனைத்து திரையரங்குகளிலும் முன்பதிவு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விலங்குகள் நல வாரியம் அளிக்காத தடையில்லா சான்றிதழ் காரணமாக 'மெர்சல்' திரைப்படத்தின் சென்சார் சான்றிதழ் இன்னும் தயாரிப்பாளரிடம் கிடைக்கவில்லை என்றும் இதன் காரணமாக 'மெர்சல்' படத்தின் ரிலீசுக்கான தடை இன்னும் முழுமையாக நீங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தடையில்லா சான்றிதழ் தேவைப்படும் விலங்குகள் உள்ள ஒருசில காட்சிகள் படத்தில் இருந்து நீக்கவும், விலங்குகள் நல வாரியத்திடம் இருந்து சான்றிதழ் பெற்ற பின்னர் அந்த காட்சிகளை சேர்க்கவும் படக்குழுவினர் கடைசிகட்ட முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே வரும் தீபாவளி தினத்தில் 'மெர்சல் ரிலீஸ் ஆவதில் எந்தவித சிக்கலும் இருக்காது என்ற படக்குழுவினர் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.