இந்திய அளவில் 25வது இடத்தை பிடித்த தளபதியின் 'மெர்சல்'

  • IndiaGlitz, [Thursday,December 21 2017]

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் கடந்த தீபாவளி தினத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை அடைந்த நிலையில் இந்த படத்தின் வசூல் குறித்து தகவல்களை ஒருசிலர் சர்ச்சையாக்கினர். சமீபத்தில் கூட ஒரு தயாரிப்பாளர் 'மெர்சல்' படத்தால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் என்று பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்

இந்த நிலையில் இதுவரை வெளியான திரைப்படங்களில் இந்திய அளவில் அதிக வசூல் செய்த 25 படங்களின் பட்டியல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த பட்டியலில் 'மெர்சல்' திரைப்படம் 25வது இடத்தை பிடித்து வதந்தி பரப்பியர்களின் வாயை மூடியுள்ளது.

இந்த பட்டியலில் அமீர்கானின் 'தங்கல்' திரைப்படம் ரூ.2122 கோடி வசூல் செய்து முதலிடத்தில் உள்ளது. இதனையடுத்து பாகுபலி 2, பிகே, பாகுபலி, பாஜ்ராங்கி பைஜான் ஆகிய படங்கள் முதல் ஐந்து இடங்களில் உள்ளது

மேலும் இந்த பட்டியலில் ரஜினியின் எந்திரன் மற்றும் கபாலி ஆகிய படங்கள் 21 மற்றும் 22வது இடத்தில் இருக்கும் நிலையில் 'மெர்சல் திரைப்படம் 25வது இடத்தில் உள்ளது.

More News

'அருவி', 'அஸ்மா' இரண்டு படத்திற்கும் என்ன வித்தியாசம்: இயக்குனர் அருண்பிரபு விளக்கம்

கடந்த வாரம் வெளியான 'அருவி' திரைப்படம் கிட்டத்தட்ட அனைத்து தரப்பினர்களின் ஆதரவையும் பெற்று திரையரங்குகளில் இரண்டாவது வாரமாக ஓடிவருகின்றது.

2ஜி வழக்கின் தீர்ப்பும், சித்தார்த்தின் 'திருட்டுப்பயலே' டுவீட்டுக்களும்

"சூப்பர் ஹிட் என்ற செய்தி வந்துள்ளது. அனைவருக்கும் விடுதலை. என் இந்தியாவே சிறந்தது. இந்திய அரசியலின் தூய்மையான குற்றமற்ற தன்மைக்கு என் வாழ்த்துகள்

தல தோனியை இயக்கும் 'நான்', 'எமன்' இயக்குனர் ஜீவாசங்கர்

விஜய் ஆண்டனியை நடிகராக 'நான்' படத்தில் அறிமுகம் செய்த இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜீவா சங்கர், பின்னர் மீண்டும் விஜய் ஆண்டனியுடன் இணைந்து 'எமன்' என்ற படத்தை இயக்கினார்

மறைந்த பிரபல தமிழ் கவிஞருக்கு சாகித்ய அகாதமி விருது

சாகித்ய அகாதமி விருது என்பது ஒவ்வொரு எழுத்தாளரின் கனவாக இருந்து வரும் நிலையில் இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது மறைந்த கவிஞர் இன்குலாப் மற்றும் பிரபல எழுத்தாளர் யூமா வாசுகி

ரஜினி-ரசிகர்கள் சந்திப்பு: எந்த நாளில் எந்த மாவட்ட ரசிகர்கள்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டிசம்பர் 26 முதல் 31ஆம் தேதி வரை இரண்டாவது கட்டமாக ரசிகர்களை சந்திக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்