கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆஸ்கார் விருது வென்ற நடிகர்-இயக்குனர் 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் கொரோனாவுக்கு பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறித்தும் அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் ஆஸ்கர் விருதுபெற்ற பிரபல ஹாலிவுட் நடிகர் மெல் கிப்சன் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அதன் பின்னர் குணமாகி வீடு திரும்பியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து மெல் கிப்சன் தரப்பினர் இருந்து தெரிவித்தபோது நடிகர், இயக்குனர் மெல் கிப்சன் அவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் அவருக்கு அளிக்கப்பட்ட உயர்தர சிகிச்சையின் அடிப்படையில் அவர் குணமாகி வீடு திரும்பியதாகவும் தெரிவித்துள்ளனர்.

64 வயதான மெல் கிப்சன், பிரேவ் ஹார்ட், அப்போக்கலிப்டோ உள்ளிட்ட பல படங்களை நடித்தும், இயக்கியும், தயாரித்தும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரேவ் ஹார்ட் படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகர் மற்றும் இயக்குனருக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

மலைகிராம பெண்ணின் போலீஸ் கனவை நிறைவேற்ற முன்வந்த எஸ்பி!!! நெகிழ்ச்சி சம்பவம்!!!

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் தொகுதியில் உள்ள ஒரு மலை கிராமம் பாலமலை.

தமிழகத்தின் முக்கிய நகரில் நாளை முதல் முழு ஊரடங்கு: கலெக்டர் அதிரடி அறிவிப்பு 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகின்றது என்பதும் இன்று மட்டும் தமிழகத்தில் 6785 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

மார்பகம் குறித்து கருத்து தெரிவித்த நபருக்கு பதிலடி கொடுத்த் நடிகை!

இந்த கொரோனா விடுமுறையில் பெரும்பாலான நடிகர் நடிகைகள் தங்களது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை

தோசை சுட்டு கொடுத்த அம்மாவை துப்பாக்கியால் சுட்ட மகன்: பரபரப்பு தகவல் 

பசியாக இருக்கும் மகனுக்கு சுடச்சுட தோசை சுட்டுக் கொடுத்த அம்மாவை அவரது மகன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பீகார் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழகத்தில் இன்று 6,785 பேர் பாதிப்பு, 6,504 பேர் மீண்டனர்: இரண்டுமே புதிய சாதனை

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,785 என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.