close
Choose your channels

கணவருடன் சென்று ராகுல் காந்தியை சந்தித்த மேகா ஆகாஷ்.. என்ன காரணம்?

Thursday, September 26, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தியை சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நடிகை மேகா ஆகாஷ், தனது கணவருடன் சென்று சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை மேகா ஆகாஷ், கடந்த சில நாட்களுக்கு முன் காதலித்த சாய் விஷ்ணு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் மேகா ஆகாஷ் காதலித்து திருமணம் செய்து கொண்ட சாய் விஷ்ணு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசு மகன் என்பதால், பல அரசியல்வாதிகளும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். குறிப்பாக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், தற்போது புதுமண தம்பதிகள் ராகுல் காந்தியை அவருடைய இல்லத்தில் சந்தித்து, ஆசி பெற்றனர். இதனைப் பற்றிய புகைப்படத்தை மேகா ஆகாஷ் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். புகைப்படத்தில் சாய் விஷ்ணுவின் தந்தை திருநாவுக்கரசும் காணப்படுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment