த்ரிஷா குறித்து திடுக்கிடும் வீடியோவை வெளியிட்ட மீராமிதுன்!

  • IndiaGlitz, [Tuesday,July 28 2020]

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நடிகை மீராமிதுன் அவ்வப்போது திரையுலக பிரமுகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மீது தனது டுவிட்டர் மூலம் குற்றம்சாட்டி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஒரு டுவிட்டை பதிவு செய்திருந்தார். அந்த வகையில் தற்போது மீண்டும் த்ரிஷா குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோது இதே த்ரிஷாவை அவர் பீட்டா உறுப்பினர் என்பதற்காக எல்லோரும் தூற்றினீர்கள். ஆனால் நான் ஒரு உண்மையை த்ரிஷா குறித்து கூறிய போது நான் உங்களுக்கு கெட்டவளாக தருகிறேன், த்ரிஷாவை நீங்கள் ஆதரித்து பேசுகிறீர்கள்.

பீட்டா உறுப்பினரான த்ரிஷா இன்று வரைக்கும் ஆடு கோழி வெட்டப்படுவது குறித்து கவலைப்பட்டார்களா? அவருக்கு நம் நாட்டு காளை மாடுகள் மட்டும்தான் உயிரினமாக தெரிகிறதா? ஜல்லிக்கட்டு நேரத்தில் த்ரிஷாவின் அம்மா மட்டுமே மன்னிப்பு கேட்டார். த்ரிஷா எதுவுமே சொல்லவில்லை.

நெப்போலிடிசம் என்பது ஜாதியில் இருந்து தான் வருகிறது. நான் தற்போது ஓப்பனாக சொல்வது என்னவென்றால் த்ரிஷா தற்போது சினிமா துறையில் இருப்பதும், இன்னமும் படங்கள் நடித்து கொண்டு இருப்பதற்கும் ஒரே காரணம் அவர் உயர் ஜாதி என்பதால்தான்.

நான் பெரியார் பற்றி ஒரு ட்விட் போட்டேன். அதைக்கூட நீங்கள் அனைவரும் கிண்டல் செய்கிறீர்கள். இந்த நெப்போலிடிசத்துடன் கூடிய ஜாதி ஒழிய வேண்டும் என்பதற்காக பெரியார் எவ்வளவு பாடுபட்டார்? அவ்வளவு போராடினார். பெரியார் பிறந்த பூமி, பெரியார் பிறந்த மண் என்று நீங்கள் சும்மா சொல்லி கொண்டே இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் யாருக்கு சப்போர்ட் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று உங்களுக்கே தெரியும். இந்த ஜாதியுடன் கூடிய நெப்போடிசம் ஒழிய வேண்டும் என்றால் இன்னொரு பெரியார் பிறந்துதான் இதை மாற்ற வேண்டுமென்றால், பெரியாரின் வழியை பின்பற்றும் நானே உருவெடுத்து இதை கண்டிப்பாக மாற்றி காட்டுவேன்; என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

More News

கஞ்சா கிடைக்காததால் கோபத்தில் கத்தியை விழுங்கிய ஆசாமி!!! அதிர்ச்சித் தகவல்!!!

ஹரியாணா மாநிலத்தில் 28 வயது இளைஞர் ஒருவர் கஞ்சா கிடைக்காமல் விரக்தியில் சமையலறை கத்தியை விழுங்கிய சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீதி சூரியனை போல முளைத்தெழக்கூடியது: கர்ணன் பர்ஸ்ட்லுக் குறித்து மாரிசெல்வராஜ்   

நடிகர் தனுஷின் பிறந்தநாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவருக்கு அதிகாலையில் இருந்தே சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

பிக்பாஸ் ஒப்பந்தம் குறித்து ஓவியாவின் பரபரப்பு தகவல்!

பிக்பாஸ் மூலம் உலக தமிழர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை ஓவியா திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டுமா? என்ற கேள்வியை எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

தலைமறைவான சூர்யாதேவி மீது மேலும் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு

கடந்த சில வாரங்களாக கொரோனா பரபரப்பையும் மீறி வனிதா விஜயகுமார்-பீட்டர் பால் திருமணம் ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வெளியானது என்பதும்

சென்னைக்கு ரூ.18 கோடி, திருத்தணிக்கு ரூ.109 கோடி: அடுக்கடுக்காக திட்டங்களைச் செயல்படுத்தும் தமிழக முதல்வர்!!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ரூ.18.24 மதிப்பிலான சுகாதார மையக் கட்டிடங்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்திருக்கிறார்.