நித்தியானந்தா மீது அன்பை வெளிப்படுத்திய மீரா மிதுன்: கைலாசாவுக்கு செல்ல ஆசை என டுவீட்

பாலியல் வழக்கில் சிக்கிய இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளியான நித்தியானந்தா, கைலாசா என்ற நாட்டை தான் உருவாகியுள்ளதாகவும் அந்த நாட்டிற்கு தானே அதிபர் என்றும் பிரகடனப்படுத்திக் கொண்டார். அதுமட்டுமின்றி கைலாச நாட்டுக்கு என ஒரு ரிசர்வ் வங்கியை ஆரம்பித்து இருப்பதாகவும் கைலாசா நாட்டிற்கு என தனியாக கரன்சியும் அறிமுகப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். நித்யானந்தாவின் இந்த அறிவிப்பை நெட்டிசன்கள் சீரியஸாக எடுத்து கொள்ளாமல் அவரை ஒரு காமெடியனாகவே பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் தனது சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பதிவு செய்து வரும் நடிகையும் சூப்பர் மாடலுமான மீரா மிதுன், திடீரென நித்யானந்தா மீது தனது அன்பை வெளிப்படுத்தி உள்ளார். ஒவ்வொருவரும் அவரை கேலி செய்து கொண்டிருக்கின்றனர், கிண்டல் செய்து கொண்டிருக்கின்றனர். அவரைப் பற்றிய நெகட்டிவான செய்திகளை பதிவு செய்து வருகின்றனர். அனைத்து மீடியாக்களும் அவருக்கு எதிராகவே உள்ளது. ஆனால் அவர் தற்போது ஒரு புதிய நாட்டை ஆரம்பித்துள்ளார். ஒவ்வொரு நாளும் அவர் வளர்ந்து வருகிறார். அவருடைய நாட்டிற்கு செல்ல நானும் விருப்பப்படுகிறேன்’ என்று கூறியுள்ளார்

ஏற்கனவே இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான நித்தியானந்தாவிடம் கைலாசா நாட்டில் ஓட்டல் ஆரம்பிக்க கடிதம் எழுதிய மதுரை ஹோட்டல் அதிபர் ஒருவர் மீது மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

கார்த்தியின் 'சுல்தான்' படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர்!

கார்த்தி நடித்து முடித்துள்ள 'சுல்தான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் கிட்டத்தட்ட நிறைவடையும் நேரத்தில்

மாணவர்களிடம் ஸ்மார்ட்போன் இல்லை… வீட்டுச்சுவரில் பாடம் நடத்தி அசத்தும் பள்ளி!!!

கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுவதும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருக்கிறது

தமிழகத்தில் 40 லட்சத்து 63 ஆயிரத்தைத் தாண்டிய கொரோனா பரிசோதனைகள்!!! மாநில அரசின் அதிரடி!!!

இந்திய அளவில் தமிழகத்தில் அதிகக் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்படுகிறது எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமருடனான ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்து இருந்தார்.

பீட்டர்பாலுக்கு நெஞ்சுவலியா? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்

https://tamil.news18.com/news/entertainment/cinema-vanitha-vijayakumar-husband-peterpaul-admitted-in-hospital-msb-337287.html

'அண்டாவ காணோம்'  திரைப்பட ரிலீஸ் குறித்து சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

விஷால் நடித்த 'திமிறு', பிரகாஷ்ராஜ் நடித்த 'காஞ்சிவரம்', தங்கர்பச்சானின் 'பள்ளிக்கூடம்' உள்பட ஒருசில படங்களில் நடித்த நடிகை ஸ்ரேயா ரெட்டி முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் 'அண்டாவ காணோம்'.