சூர்யாவின் அடுத்த படத்தில் '8 தோட்டாக்கள்'' பட நடிகை

  • IndiaGlitz, [Wednesday,November 15 2017]

ஸ்ரீகணேஷ் இயக்கிய '8 தோட்டாக்கள்' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வெற்றி பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தில் நடித்த நடிகை மீரா மிதுனுக்கு சூர்யாவின் அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது

சூர்யா, கீர்த்திசுரேஷ் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தில் ஒரு நட்சத்திர கூட்டமே நடித்துள்ளனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் மீரா மிதுன் நடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்த தகவலை மீரா சமீபத்தில் அளித்த பேட்டியில் உறுதி செய்துள்ளார்

இருப்பினும் இந்த படத்தில் தன்னுடைய கேரக்டர் படக்குழுவினர்களால் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதால் தனது கேரக்டர் குறித்து எதுவும் சொல்ல முடியாத நிலையில் இருப்பதாக கூறியுள்ளார். இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

முதல்முறையாக வாழ்த்துக்களுடன் மகிழ்ச்சியை பரிமாற்றம் செய்து கொண்ட கமல்-ரஜினி

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவருமே சமூக வலைத்தளங்களில் குறிப்பாக டுவிட்டரில் பிரபலம் என்றாலும் ஒருவர் கூறிய கருத்தை இன்னொருவர் ரீடுவீட் செய்ததோ, வாழ்த்து தெரிவித்ததோ கிடையாது

சட்டமன்ற கூட்டத்தை கட் அடித்துவிட்டு குத்தாட்டம் ஆடிய எம்.எல்.ஏ

கர்நாடக மாநிலத்தில் தற்போது சட்டமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு அந்த விழாவில் குத்தாட்டம் ஆடியதாக எம்.எல்.ஏ ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கொன்று பார், வென்று தீர்வேன்: குத்திக்கிழிக்கும் வீடியோ குறித்து கமல்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் 'இந்து தீவிரவாதிகள் இனி இல்லை என்று சொல்ல முடியாது' என்ற கமல்ஹாசனின் கருத்துக்கு நாடு முழுவதும் பயங்கர எதிர்ப்பு கிளம்பியது.

கேரள அரசின் துணிச்சலான நடவடிக்கைக்கு கமல் பாராட்டு

பிறப்பு சான்றிதழில் சாதி பெயரை குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என்று சமீபத்தில் கேரள அரசு அரசாணை ஒன்றை பிறப்பித்து அதனை சுற்றறிக்கையாக வெளியிட்டிருந்தது.

பசிக்கு மதமில்லை, விவசாயிகள் ஒன்றுகூட கமல் அழைப்பு

கமல்ஹாசனின் அரசியல் பாதை வித்தியாசமானது என்பதை அவரது நடவடிக்கைகளை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு தெரியவரும். குறிப்பாக விவசாயிகள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் கமல்ஹாசன்.