சிவகார்த்திகேயன் படத்தை அடுத்து மேலும் பிரபல நடிகரின் படத்தில் மீராமிதுன்

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய மீராமிதுன், சர்ச்சைக்குரிய போட்டியாளர்களில் ஒருவராக காணப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது சக போட்டியாளர்கள் மீது பழிசுமத்துவது அவரது வழக்கமாக இருந்தது. குறிப்பாக அவர் சேரன் மீது சுமத்திய அபாண்டமான குற்றச்சாட்டால் பார்வையாளர்களால் வெறுக்கப்பட்டார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னரும் அவர் தனது தவறை உணர்ந்ததாக தெரியவில்லை என்பது அவரது பேட்டிகளில் இருந்து தெரிய வருகிறது

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'நம்ம வீட்டு பிள்ளை' திரைப்படத்தில் மீராமிதுன் ஒரு கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். தற்போது மேலும் ஒரு படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது

'மூடர் கூடம்' நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அருண்விஜய் நடித்து வரும் திரைப்படம் 'அக்னிசிறகுகள்'. இந்த படத்தின் நாயகியாக ஷாலினி பாண்டே நடித்து வரும் நிலையில் தற்போது மீராமிதுனும் முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. நான்காவது வாரத்திலேயே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்துவிட்டாலும் மீராவுக்கு திரையுலகில் வாய்ப்புகள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

ஜெயம் ரவியின் 'கோமாளி' ரன்னிங் டைம்!

ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' திரைப்படம் இன்னும் இரண்டு நாட்களில் அதாவது ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தில் வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்திற்கான புரமோஷன் ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகிறது

வனிதா பற்ற வச்ச நெருப்பால் பொங்கி எழுந்த அபிராமி: டென்ஷன் ஆன முகின்

பிக்பாஸ் வீட்டில் வனிதாவின் வரவு நிச்சயம் பரபரப்பை ஏற்படுத்தும் என்பது தெரிந்ததே. ஆனால் இந்த அளவுக்கு உடனே பற்ற வைக்கும் என்பதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

'கேம் இனிமேல் தான் ஆரம்பம்: ஹவுஸ்மேட்ஸ்களை வெளுத்து வாங்கிய வனிதா!

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றால் என்ன? இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என்ன? இந்த நிகழ்ச்சியால் மக்கள் தெரிந்து கொள்வது என்ன? என்பது தெரியாமலேயே இதுவொரு விளையாட்டு ஷோ என

'நேர் கொண்ட பார்வை' படம் குறித்து வனிதா பேசிய வசனங்கள்

பிக்பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தாளியாக வந்துள்ள வனிதா, ஒவ்வொரு போட்டியாளரையும் கன்னத்தில் அறைவது போல் கேள்வி கேட்டு வரும் நிலையில்

தூக்கி போட்டுட்டு போய்கிட்டே இரு! அபிராமிக்கு வனிதாவின் அறிவுரை

பிக்பாஸ் வீட்டில் வனிதா நேற்று வந்தபின்னர் தான், ஹவுஸ்மேட்ஸ்களுக்கு தான் எதற்காக இங்கு வந்தோம், ஆனால் என்ன தவறு செய்து கொண்டிருக்கின்றோம் என்பது புரிந்தது