24 மணி நேரம் எனக்கு சாப்பாடு கொடுக்கவில்லை: மீராமிதுன் குற்றச்சாட்டு

  • IndiaGlitz, [Sunday,August 15 2021]

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான மீராமிதுன் சமீபத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பட்டியலினத்தவர் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மீராமிதுன் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவரை காவல் துறையில் ஆஜராக சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்ட நிலையில் கேரளாவில் நேற்று போலீசார் அவரை கைது செய்தனர். 

மீராமிதுனை கைது செய்த போது கூட அவர் தன்னை காவல்துறையினர் அராஜகமாக நடத்துவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் தன்னை போலீஸார் கைது செய்தால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் அவர் மிரட்டல் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் காவல்துறையினர் அவரை கைது செய்து இன்று காலை சென்னைக்கு அழைத்து வந்தனர். ரகசிய இடத்தில் அவரிடம் விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் செய்தியாளர்களிடம் ’கடந்த 24 மணி நேரமாக தனக்கு சாப்பாடு எதுவும் கொடுக்கவில்லை என்றும் எதற்காக இப்படி செய்து வருகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை என்றும், மூன்று வருடமாக நான் அளித்த புகாரின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் கூறிக் கொண்டே சென்றார். இது குறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

More News

இயக்குனர் மிஷ்கினுக்கு பெண் காவல்துறை அதிகாரி அளித்த கெளரவம்!

இந்தியா முழுவதும் 75வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பெண் காவல்துறை அதிகாரி ஒருவர் தன்னுடைய சட்டைப்பையில் தேசியக்கொடியை அணிவித்தது

'சீயான் 60' முடிவுக்கு வந்த அடுத்த நாளே தொடங்கிய 'கோப்ரா' படப்பிடிப்பு!

சியான் விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி வந்த 'சியான் 60' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் டார்ஜிலிங்கில் நடந்தது என்பதும்

ரொம்ப பெருமையாக இருக்கின்றது: மீராமிதுன் கைது குறித்து சக பிக்பாஸ் நடிகை!

நடிகை மீரா மிதுனை தமிழக காவல்துறை கைது செய்திருப்பது ரொம்ப பெருமையாக இருப்பதாக அவருடைய சக பிக்பாஸ் நடிகை ஒருவரே டுவிட்டரில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சிம்புவின் அம்மா சொல்வது 100% பொய்: தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் பேட்டி!

சிம்பு நடித்துவரும் 'வெந்து தணிந்தது காடு' என்ற படத்தால் பெப்ஸி மற்றும் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்ட நிலையில் இந்த பிரச்சனை குறித்து சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர்

இதுவரை நான் யாரிடமும் சொல்லாத ரகசியம்: விஜய்டிவி டிடி பேட்டியில் நயன்தாரா!

இதுவரை தான் யாரிடமும் சொல்லாத ரகசியம், ரொம்ப ரகசியம் என விஜய் டிவியில் டிடி எடுத்த பேட்டியில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கூறியுள்ளது என்ன? என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை எழுப்பியுள்ளது