அடுத்த பிக்பாஸ் வீட்டின் தலைவர் மீராமிதுனா? வனிதாவுக்கு இருக்கு தரமான சம்பவம்!

பிக்பாஸ் வீட்டின் முதல் தலைவராக வனிதா தேர்வு செய்யப்பட்ட நிலையில் அந்த பதவி ஏதோ முதலமைச்சர் பதவி போல் வானாளவிய அதிகாரம் கொண்ட பதவி என நினைத்து கொண்டு வனிதா சற்று ஓவராகவே ஆட்டம் போட்டார். குறிப்பாக மீராமிதுனை தலைவர் பதவியை வைத்து அவர் தினமும் ஆட்டி வைத்து அழ வைத்தது தெரிந்ததே.

இந்த நிலையில் வனிதாவின் தலைவர் பதவி இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில் நாளை முதல் புதிய தலைவரை தேர்வு செய்ய இன்றே கமல்ஹாசன் ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளார். அதில் தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்பும் நான்கு பேர் முன்வரலாம் என கூற உடனே மீராமிதுன் எழுந்து முன்வந்தார். அவரை தொடர்ந்து ரேஷ்மாவும் தலைவர் பதவிக்கு போட்டியிட தயாரானார். மேலும் மோகன் வைத்யா மற்றும் முகன் ஆகியோர்களும் முன்வந்தனர்.

இந்த நிலையில் மோகன் வைத்யாவை தலைவராக்க விரும்புபவர்கள் கையை தூக்கலாம் என்று அறிவிக்கப்பட்டவுடன் சேரன், முகன், சரவணன், கவின் மற்றும் சாண்டி ஆகியோர் கையை தூக்கினர். பெண் வேட்பாளருக்கு இன்னும் நிறைய சான்ஸ் கொடுக்க வேண்டும் என்று நினைக்கின்றேன் என்று கூறிய மீராமிதுனுக்கு எத்தனை ஓட்டு விழுந்தது, ஒருவேளை அவர் தலைவரானால் வனிதாவின் ஏற்படும் தரமான சம்பவங்கள் என்னென்னவாக இருக்கலாம்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.