இந்த அரசு சுத்த வேஸ்ட்: மீராமிதுன் பகீர் குற்றச்சாட்டு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சர்ச்சைக்குரிய போட்டியாளரான மீராமிதுன், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தவுடனும் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தமிழக முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் உள்பட அனைவர் வீட்டிலும் வருமான வரித்துறை ரெய்டு செய்ய வேண்டும் என்றும், கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கும் இவர்கள் பணத்தை மீட்டால் அனைத்து மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு லட்சம் கொடுக்கலாம் என்றும் கூறியிருந்தார்

மீராமிதுனின் இந்த டுவீட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது மட்டுமின்றி அவருக்கு மிரட்டலும் வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து தற்போது அவர் மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய டுவிட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நான் உண்மையை பேசியபோதிலும் விஜயபாஸ்கர் தரப்பில் இருந்து ரொம்ப சீப்பாக நடந்து கொள்கின்றார்கள். அவர்களின் ஆட்கள் என்னை மிரட்டி என்னுடைய டுவிட்டை டெலிட் செய்ய சொல்கிறார்கள். இந்த அரசு தவறாக செயல்படுகிறது. ஒவ்வொருவரும் சுத்த வேஸ்ட். தமிழகம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கின்றது. என்னென்ன தவறு நடக்கின்றது என்பதை விரைவில் விளக்குகின்றேன்’ என்று கூறியுள்ளார். மீராமிதுனின் இந்த டுவிட்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

More News

ஒருமுறை கொரோனா பாதித்தவருக்கு மீண்டும் கொரோனா வருமா??? WHO என்ன சொல்கிறது???

உலகில் பல நாடுகள், கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து மீண்டுள்ளவர்கள் இயல்பான வேலைகளுக்கு திரும்பலாம் எனக் கருத்துத் தெரிவித்து வருகின்றன.

சார்ஜ் போட்டு வீடியோகால் பேசிய பெண்: மொபைல் வெடித்ததால் ஏற்பட்ட விபரீதம்

சார்ஜ் போட்டு கொண்டே மொபைல் போனில் பேசக்கூடாது என்றும், இதுபோன்று பேசினால் மொபைல் வெடித்து விபரீதம் ஏற்பட்டுள்ள பல சம்பவங்கள் நடந்துள்ளது என்று தெரிந்தும்

நாங்கள்‌ எங்கள் கருத்தில் உறுதியாகவே இருக்கிறோம்: தஞ்சை கோவில் சர்ச்சை குறித்து சூர்யாவின் அறிக்கை

கடந்த சில நாட்களாக ஜோதிகா பேசிய தஞ்சை பெரிய கோவில் குறித்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த பரபரப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும்

எல்லா கேள்விகளும் பெண்களுக்கு மட்டும்தானா? அமலாபால் ஆவேச கேள்வி

தமிழ் திரையுலகின் முன்னனி நடிகைகளில் ஒருவரான அமலாபால் தனது சமூக வலைத்தளத்தில் கேள்விகள் எல்லாம் பெண்களை நோக்கியே வருவதாகவும் ஆண்களிடம்

'பொன்மகள் வந்தாள்' விவகாரம்: கலைப்புலி எஸ் தாணுவின் வேண்டுகோள்

ஜோதிகா நடித்த 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் நேரடியாக ஓடிடி பிளாட்பார்மில் ரிலீஸ் ஆகவிருப்பதால் திரையரங்கு உரிமையாளர்கள் சூர்யா மற்றும் அவரை சேர்ந்தவர்களுக்கு தடை விதித்து இருப்பது குறித்து எஸ் தாணு