close
Choose your channels

பட்டியலின மக்கள் மீது அவதூறு பேச்சு: நடிகை மீராமிதுன் மீது 7 பிரிவுகளில் வழக்கு!

Sunday, August 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பட்டியலின மக்கள் குறித்து அவதூறான கருத்து பரப்பிய புகாரில் நடிகை மீரா மிதுன் மீது 7 பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

ஒருசில தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகை மீரா மிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தார். இவர் சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் இருக்கக்கூடிய நபர்கள் தமிழ் சினிமாத்துறையில் குற்றப்பின்னணி உள்ளவர்கள் எனவும், அவர்கள் மீது அவதூறு பரப்பும் வகையிலும் ஆபாசமாகவும் பேசியிருந்தார்.

இந்த வீடியோ வைரலான நிலையில் அவர் மீது பல்வேறு கண்டனங்கள் எழுந்தன. இதனையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவில் விசிக சார்பில் அந்தக் கட்சியின் பிரமுகர் வன்னியரசு ஒரு புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் தற்போது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீராமிதுன் மீது 7 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதில் மூன்று பிரிவுகள் தேசிய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மற்றும் 4 பிரிவுகள் இந்திய தண்டனைச் சட்டத்தின் அடிப்படையில் என மொத்தம் ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீராமிதுனுக்கு சம்மன் அனுப்பி அவரிடம் விசாரணை செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment