பட்டியலின மக்கள் மீது அவதூறு பேச்சு: நடிகை மீராமிதுன் மீது 7 பிரிவுகளில் வழக்கு!

  • IndiaGlitz, [Sunday,August 08 2021]

பட்டியலின மக்கள் குறித்து அவதூறான கருத்து பரப்பிய புகாரில் நடிகை மீரா மிதுன் மீது 7 பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

ஒருசில தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகை மீரா மிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தார். இவர் சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் இருக்கக்கூடிய நபர்கள் தமிழ் சினிமாத்துறையில் குற்றப்பின்னணி உள்ளவர்கள் எனவும், அவர்கள் மீது அவதூறு பரப்பும் வகையிலும் ஆபாசமாகவும் பேசியிருந்தார்.

இந்த வீடியோ வைரலான நிலையில் அவர் மீது பல்வேறு கண்டனங்கள் எழுந்தன. இதனையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவில் விசிக சார்பில் அந்தக் கட்சியின் பிரமுகர் வன்னியரசு ஒரு புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் தற்போது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீராமிதுன் மீது 7 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதில் மூன்று பிரிவுகள் தேசிய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மற்றும் 4 பிரிவுகள் இந்திய தண்டனைச் சட்டத்தின் அடிப்படையில் என மொத்தம் ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீராமிதுனுக்கு சம்மன் அனுப்பி அவரிடம் விசாரணை செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

More News

பிரபுதேவா அடுத்த படத்தை இயக்கும் பிரபல பாடலாசிரியர்!

பிரபல நடிகர் பிரபுதேவாவின் அடுத்த படத்தை பிரபல பாடலாசிரியர் ஒருவர் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்ட்டு, இன்று பூஜையும் நடத்தப்பட்டுள்ளது

நயன்தாரா பெற்ற முதல் சர்வதேச விருது! வைரல் புகைப்படங்கள்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கினார்கள் என்பதும் இந்த நிறுவனம் பல திரைப்படங்களை தயாரித்தும், ஒரு சில

'சார்பாட்டா பரம்பரை 2': பா ரஞ்சித் கூறிய ஆச்சரிய தகவல்!

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா, பசுபதி உள்பட பலரது நடிப்பில் உருவான 'சார்பாட்டா பரம்பரை திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பது தெரிந்ததே.

அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு: இயக்குனர் தங்கர்பச்சான் வீட்டிற்கு சென்ற அதிகாரிகள்!

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் உத்தரவின் பேரில் மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக தங்கர் பச்சானின் வீட்டிற்கு சென்றதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

திடீரென இந்திய அளவில் டிரெண்டான பிக்பாஸ் ஷிவானி: காரணம் இதுதான்!

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நடிகை ஷிவானி நாராயணன், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தமிழகம் முழுவதும் பிரபலமானார். அது மட்டுமின்றி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான