நடிகை மீனாவின் குடும்பத்திற்குள்ளும் நுழைந்த கொரோனா வைரஸ்: யார் யாருக்கு பாதிப்பு?

  • IndiaGlitz, [Wednesday,January 05 2022]

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பாக திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரபலங்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 90களில் பிரபலமான நாயகியாக இருந்தவரும் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவருமான நடிகை மீனாவின் குடும்பத்திற்குள்ளும் கொரோனா
வைரஸ் தொற்று நுழைந்து விட்டது என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மீனா, அவரது கணவர் மற்றும் மீனாவின் மகள் நைனிகா ஆகிய மூவருக்குமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க கேட்டுக்கொள்வதாகவும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவும் என்றும் மீனா கேட்டுக் கொண்டுள்ளார்.

More News

நடிகர் அருண்விஜய்க்கு கொரோனா பாதிப்பு: தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்!

தமிழ் திரை உலகின் பிரபல நடிகர்களில் ஒருவரான அருண் விஜய்க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக சமூக வலைத்தளத்தில் அறிவித்து உள்ளார். 

நாளை முதல் திரையரங்குகள் மூடப்படுகிறதா?

தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு என்றும் ஞாயிற்றுக்கிழமையில் முழு நேர ஊரடங்கு என்றும் தமிழக அரசு சற்று முன் அறிவித்தது என்பதை பார்த்தோம்.

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு அறிவிப்பு!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது

பணமோசடி வழக்கில் தேடப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது!

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி ரூ.3 கோடி பணமோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர

ஒரு இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய இளம்சிங்கம்… கொண்டாடும் ரசிகர்கள்!

இந்திய அணி ஜோகனஸ்பர்க்கில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து 2ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிவருகிறது.