ஹிந்தியில் ஏன் பேச வேண்டும்? நான் தென்னிந்தியர்.. நடிகை மீனா பதிலடி..!

  • IndiaGlitz, [Tuesday,October 01 2024]

சமீபத்தில் நடந்த திரைப்பட விழாவில் நடிகை மீனா கலந்து கொண்ட நிலையில், நிருபர்கள் அவரிடம் ஹிந்தியில் பேசுமாறு கேட்டபோது, நான் ஏன் ஹிந்தியில் பேச வேண்டும்? இது தென்னிந்திய திரைப்பட விழா, நான் தென்னிந்தியர் என்பதில் பெருமை கொள்கிறேன், என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர் மீனா என்பதும், ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் வழங்கும் விழாவில் அவர் கலந்து கொண்டார். அந்த விழாவில் பங்கேற்றபோது, மீனாவிடம் செய்தியாளர்கள் ஹிந்தியில் பேசுமாறு கேட்டனர். அப்போது, இது என்ன, ஹிந்தி விழாவா? பிறகு ஏன் என்னை அழைத்தீர்கள்? என்று சிரித்துக்கொண்டே கேள்வி கேட்டார். மேலும், நான் ஒரு தென்னிந்திய விழா என்றுதான் நினைத்தேன். தென்னிந்திய படங்கள், தென்னிந்திய நடிகர்கள் சிறப்பானவர்கள். நான் ஒரு தென்னிந்தியர் என்பதை பெருமை கொள்கிறேன், என்றார்.

வட இந்திய, தென் இந்திய சினிமா உலகினரை ஒன்றிணைத்து பெரிய நிகழ்வாக இந்த விழா நடத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ள நடிகை மீனாவின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

More News

மகாளய அமாவாசை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் திதி கொடுக்கும் முறை

பித்ரு தோஷ நிவர்த்திக்கு சிறந்த நாள்! மகாளய அமாவாசை: முன்னோர்களை வழிபடும் சிறப்பு நாள் | ஆன்மீகக்ளிட்ஸ்

'வேட்டையன்' படத்தின் சென்சார் தகவல்.. ட்ரிம் செய்ய தேவை இல்லாத ரன்னிங் டைம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' திரைப்படம் வரும் 10-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல் வேலையாய் உள்ளன.

எனது படத்தில் இருந்து டிடிஎஃப் வாசன் நீக்கப்படுகிறார்: இயக்குனர் அதிரடி அறிவிப்பு..

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன், "மஞ்சள் வீரன்" என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்த நிலையில், அந்த படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் செல்அம் அறிவித்திருப்பது பரபரப்பை

'தளபதி 69' படத்தின் படப்பிடிப்பு எப்போது? நாயகி, வில்லன் யார்?

தளபதி விஜய் நடிக்கவிருக்கும் 69வது திரைப்படத்தை எச் வினோத் இயக்கவிருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது நடைபெறும் என்பதற்கான தகவல் கசிந்துள்ளது.

தன்னைத்தானே திடீரென சுட்டுக்கொண்ட பிரபல நடிகர்.. என்ன நடந்தது?

பழம்பெரும் நடிகர் திடீரென துப்பாக்கியால் தானே சுட்டுக் கொண்ட சம்பவம், அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.