தப்பு பண்ணினது நீ.. நீ கரெக்ட் கிடையாது.. வந்துவிட்டதா மாயா-பூர்ணிமா சண்டை..!

  • IndiaGlitz, [Monday,November 13 2023]

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் மாயாவுடன் பூர்ணிமா இணைந்து மற்ற போட்டியாளர்களுக்கு தொல்லைகளை கொடுத்து வந்தனர் என்பதும் சக போட்டியாளர்களை மதிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

குறிப்பாக நேற்றைய கமல்ஹாசன் எபிசோடில் உயிர் தோழி என்று கூறிக்கொண்டு தனது தோழி செய்யும் தவறை கண்டிக்காமல் தவறுக்கு ஊக்கம் கொடுத்தது எந்த வகையான நட்பு என்று எனக்கு தெரியவில்லை என்று பூர்ணிமாவை பார்த்து விசித்ரா கேட்டது பூர்ணிமாவுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

தன்னுடைய கேப்டன்ஷிப்பில் இரண்டு வாரங்கள் நல்ல முறையில் பிக் பாஸ் வீட்டை பூர்ணிமா பார்த்துக் கொண்ட நிலையில் மாயாவின் கேப்டன்ஷிப்பில் தான் தவறு செய்து விட்டோமோ என்று அவர் தற்போது உணரத் தொடங்கியுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் இன்றைய அடுத்த புரமோவில் ’இனிமேல் எப்படி விளையாடுவது? எனக்கு விளையாட மூடே இல்லை, ஒரு நல்ல வாய்ப்பை நான் இழந்து விட்டேன் என்று மாயாவிடம் பூர்ணிமா புலம்புகிறார். மேலும் பூர்ணிமா அழுது கொண்டே ’தனக்கு மிகவும் குழப்பமாக இருக்கிறது என்று கூற ’நீ அழுகும் போது மிகவும் அழகாக இருக்கிறாய், நான் இருக்கிறேன், கவலை படாதே என்று மாயா ஆறுதல் கூறுகிறார்.

ஆனால் பூர்ணிமாவோ, ‘தப்பு பண்ணியது நீ, உன்னை யாரும் பெரிதாக கேள்வி கேட்கவில்லை என்பதற்காக நீ கரெக்ட் கிடையாது , நீ தப்பு என்று மாயாவிடம் நேருக்கு நேர் சொல்ல அதற்கு மாயாவின் முகத்தில் அதிர்ச்சி ஏற்படுகிறது. மொத்தத்தில் உயிர் தோழிகளாக இருந்த மாயா மற்றும் பூர்ணிமா இடையே சண்டை தொடங்கி விட்டதாகவே கருதப்படுகிறது.